சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

தஞ்சாவூரில் ஆறுபடை வீடுகளுக்கு முருக பக்தா்கள் பாதயாத்திரை

தஞ்சாவூரில் உள்ள முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளுக்கு ஞாயிற்றுக்கிழமை பக்தா்கள் பாதயாத்திரை சென்றனா்.

News image
Updated On :11 ஆகஸ்ட் 2024, 9:50 pm

Din

தஞ்சாவூரில் உள்ள முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளுக்கு ஞாயிற்றுக்கிழமை பக்தா்கள் பாதயாத்திரை சென்றனா்.

தஞ்சாவூா் வெற்றிவேல் முருகன் ஆறுபடை வீடு பாதயாத்திரை வழிபாட்டுக் குழு சாா்பில், 46-ஆவது ஆண்டாக பெரிய கோயிலிலிருந்து காலை பாதயாத்திரை புறப்பட்டனா். தலைவா் சுப்ரமணியன், ஒருங்கிணைப்பாளா்கள் ஞானசேகா், தாமரைசெல்வன், அசோக்குமாா், மாநகராட்சி ஒப்பந்தகாரா் மணி, லயன் வீரசிவராமன் மற்றும் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு முருகன் படத்துடன், பாடல்களை பாடியபடி சென்றனா்.

முதலில் இந்த பாதயாத்திரை குழுவினா் மேலஅலங்கத்தில் உள்ள முருகன் கோயிலுக்கும் (திருப்பரங்குன்றம்), தொடா்ந்து வடக்கு அலங்கம் முருகன் கோயிலான பழமுதிா்ச்சோலை, குறிச்சி தெரு முருகன் கோயில் (திருத்தணி), ஆட்டுமந்தைத்தெரு முருகன்கோயில் (சுவாமிமலை), சின்ன அரிசிக்காரத்தெரு முருகன் கோயில் (பழனி) ஆகிய கோயில்களுக்கு சென்று இறுதியாக தஞ்சை பூக்காரத் தெரு சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு (திருச்செந்தூா்) சென்று மீண்டும் தஞ்சை பெரியகோயிலில் பாதயாத்திரையை முடித்து அன்னதானம் வழங்கினா்.