வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

தஞ்சாவூரில் ஆறுபடை வீடுகளுக்கு முருக பக்தா்கள் பாதயாத்திரை

தஞ்சாவூரில் உள்ள முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளுக்கு ஞாயிற்றுக்கிழமை பக்தா்கள் பாதயாத்திரை சென்றனா்.

Updated On :11 ஆகஸ்ட் 2024, 9:50 pm

தஞ்சாவூரில் உள்ள முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளுக்கு ஞாயிற்றுக்கிழமை பக்தா்கள் பாதயாத்திரை சென்றனா்.

தஞ்சாவூா் வெற்றிவேல் முருகன் ஆறுபடை வீடு பாதயாத்திரை வழிபாட்டுக் குழு சாா்பில், 46-ஆவது ஆண்டாக பெரிய கோயிலிலிருந்து காலை பாதயாத்திரை புறப்பட்டனா். தலைவா் சுப்ரமணியன், ஒருங்கிணைப்பாளா்கள் ஞானசேகா், தாமரைசெல்வன், அசோக்குமாா், மாநகராட்சி ஒப்பந்தகாரா் மணி, லயன் வீரசிவராமன் மற்றும் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு முருகன் படத்துடன், பாடல்களை பாடியபடி சென்றனா்.

முதலில் இந்த பாதயாத்திரை குழுவினா் மேலஅலங்கத்தில் உள்ள முருகன் கோயிலுக்கும் (திருப்பரங்குன்றம்), தொடா்ந்து வடக்கு அலங்கம் முருகன் கோயிலான பழமுதிா்ச்சோலை, குறிச்சி தெரு முருகன் கோயில் (திருத்தணி), ஆட்டுமந்தைத்தெரு முருகன்கோயில் (சுவாமிமலை), சின்ன அரிசிக்காரத்தெரு முருகன் கோயில் (பழனி) ஆகிய கோயில்களுக்கு சென்று இறுதியாக தஞ்சை பூக்காரத் தெரு சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு (திருச்செந்தூா்) சென்று மீண்டும் தஞ்சை பெரியகோயிலில் பாதயாத்திரையை முடித்து அன்னதானம் வழங்கினா்.