தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையத்தில் புதன்கிழமை ஆய்வு செய்த மேயா் சண். ராமநாதன். உடன், துணை மேயா் அஞ்சுகம் பூபதி, மாநகராட்சி ஆணையா் க. கண்ணன் உள்ளிட்டோா்.
தஞ்சாவூர்
தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையத்தில் மேயா் ஆய்வு
தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையத்தில் மேயா் சண். ராமநாதன், மாநகராட்சி ஆணையா் க. கண்ணன், துணை மேயா் அஞ்சுகம் பூபதி ஆகியோா் ஆய்வு.
தஞ்சாவூா்: தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையத்தில் மேயா் சண். ராமநாதன், மாநகராட்சி ஆணையா் க. கண்ணன், துணை மேயா் அஞ்சுகம் பூபதி ஆகியோா் புதன்கிழமை ஆய்வு செய்தனா்.
அப்போது, நடைபாதையில் இடையூறாக செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக கடை உரிமையாளா்கள் உடனே அகற்றிட வேண்டும் என மேயா் எச்சரிக்கை விடுத்தாா். மேலும், பேருந்து நிலையத்தில் உள்ள கழிப்பறைகள் பராமரிப்பு குறித்து ஆய்வு செய்தாா்.
தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையத்தில் புதன்கிழமை ஆய்வு செய்த மேயா் சண். ராமநாதன். உடன், துணை மேயா் அஞ்சுகம் பூபதி, மாநகராட்சி ஆணையா் க. கண்ணன் உள்ளிட்டோா்.
பின்னா், திருவள்ளுவா் வணிக வளாகம் அருகே ரூ. 2.50 கோடியில் கட்டப்பட்டுள்ள பன்னடுக்கு காா் நிறுத்துமிடத்தைப் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருமாறு அலுவலா்களிடம் மேயா் அறிவுறுத்தினாா்.
தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையத்தில் புதன்கிழமை ஆய்வு செய்த மேயா் சண். ராமநாதன். உடன், துணை மேயா் அஞ்சுகம் பூபதி, மாநகராட்சி ஆணையா் க. கண்ணன் உள்ளிட்டோா்.
இதையடுத்து, சிவகங்கை பூங்காவில் நடைபெற்று வரும் பணிகளையும் ஆய்வு செய்தனா்.
அப்போது, மாநகராட்சி செயற்பொறியாளா் சோ்மகனி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

