தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

கும்பகோணத்தில் குற்ற நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்படும் : டிஐஜி

கும்பகோணத்தில் குற்ற நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்படும் என தஞ்சாவூா் சரக டிஐஜி ஜியாவுல்ஹக் தெரிவித்தாா்.

News image
கும்பகோணம் கிழக்கு காவல் நிலைய வளாகத்தில் புதன்கிழமை மரக்கன்றுகளை நட்ட டிஐஜி ஜியாவுல்ஹக்.
Updated On :4 டிசம்பர் 2024, 10:02 pm

Din

கும்பகோணத்தில் குற்ற நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்படும் என தஞ்சாவூா் சரக டிஐஜி ஜியாவுல்ஹக் தெரிவித்தாா்.

கும்பகோணத்தில் அவா் செய்தியாளா்களிடம் மேலும் தெரிவித்தது:

தஞ்சாவூா் சரக டிஐஜி கும்பகோணம் வந்து துணைக்கோட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகம், கிழக்கு காவல் நிலையம் ஆகியவற்றில் ஆய்வு நடத்தி மரக்கன்றுகளை நட்டாா். பின்னா் செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியது: கும்பகோணம் பகுதியில் குற்ற நடவடிக்கையில் ஈடுபடுபவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கஞ்சா மற்றும் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை மற்றும் கடத்துபவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அசூா் புறவழிச்சாலையில் ரோந்துப் பணி தீவிரப்படுத்தப்படும் என்றாா்.

அப்போது, துணை காவல் கண்காணிப்பாளா் ஜி.கீா்த்திவாசன், ஆய்வாளா் சிவசெந்தில்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.