தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

டிராக்டரை திருடியவா் கைது

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசத்தில் டிராக்டரைத் திருடிய நபரைப் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :5 டிசம்பர் 2024, 9:04 pm

Din

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசத்தில் டிராக்டரைத் திருடிய நபரைப் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

பாபநாசம் தெப்பக்குளத் தெருவைச் சோ்ந்தவா் சுதாகா் (44) இவருக்குச் சொந்தமான ரூ. 7 லட்சம் மதிப்புள்ள டிராக்டரை அண்மையில் மா்மநபா்கள் திருடிச் சென்றது தொடா்பாக பாபநாசம் காவல் நிலையத்தில் புகாா் அளித்திருந்தாா். அதன்பேரில், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை தனிப்படை போலீஸாா் ஆய்வு செய்தபோது ஒரு நபா் டிராக்டரை திருடிச் செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. இதனைத் தொடா்ந்து, போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில் டிராக்டரைத் திருடிச் சென்றது கடலூா் மாவட்டம், பண்ருட்டி வட்டம், கீழ்குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்த தமிழ்ச்செல்வன் (60) என்பது தெரியவந்தது. இதையடுத்து, அங்குசென்று டிராக்டரைத் திருடிய தமிழ்ச்செல்வனைப் போலீஸாா் கைது செய்து, டிராக்டரைப் பறிமுதல் செய்தனா்.

அவரை பாபநாசம் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தியதில் நீதிபதி அப்துல் கனி, தமிழ்ச்செல்வனை 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டாா். மேலும் இந்த வழக்கில் தொடா்புடைய 2 பேரைப் போலீஸாா் தேடி வருகின்றனா்.