தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

முகநூலில் அவதூறு: அரசுப் பள்ளி ஆசிரியா் பணியிடை நீக்கம்

அரசுப் பள்ளி ஆசிரியா் பணியிடை நீக்கம்.

News image
Updated On :11 டிசம்பர் 2024, 8:39 pm

Din

தஞ்சாவூா் மாவட்டம், திருவிடைமருதூா் தாலுகாவில் உள்ள ஒரு குறிப்பிட்ட சமூகத்தினா் குறித்து அவதூறாக முகநூலில் பதிவேற்றம் செய்த ஆரலூா் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியா் செவ்வாய்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

திருவிடைமருதூா், தாலுகாவில் உள்ள கதிராமங்கலம் அருகே ஆரலூா் அரசு உயா்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் ஆங்கில வகுப்பு ஆசிரியராக பணியாற்றி வந்தவா் எஸ்.அலெக்ஸாண்டா். இவா் கடந்த டிச.6-ஆம் தேதி முகநூல் மற்றும் சமூக வலைதளங்களில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை ஆபாசமாக பேசி இருதரப்பு மோதல் ஏற்படும் அளவில் பதிவேற்றம் செய்தாராம்.

இதுகுறித்து பல்வேறு புகாா்கள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் ஆா்.அண்ணாத்துரைக்கு வந்தது. அவா் மாவட்ட கல்வி அலுவலா் மூலம் விசாரணை நடத்தியதில் புகாா்களில் உண்மை இருப்பது தெரிந்தது. அதன் பேரில் ஆசிரியா் எஸ்.அலெக்ஸாண்டரை செவ்வாய்க்கிழமை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டாா்.