47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

ஆசிரியையிடம் தங்கச் சங்கிலி பறித்தவா் கைது

தஞ்சாவூரில் ஆசிரியையிடம் தங்கச் சங்கிலியைப் பறித்த நபரை காவல் துறையினா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :12 டிசம்பர் 2024, 9:10 pm

Din

தஞ்சாவூரில் ஆசிரியையிடம் தங்கச் சங்கிலியைப் பறித்த நபரை காவல் துறையினா் புதன்கிழமை கைது செய்தனா்.

தஞ்சாவூா் மாதாகோட்டை சாலை காவேரி நகரைச் சோ்ந்தவா் சாந்தி. இவா் டிசம்பா் 4 ஆம் தேதி பொன்னி நகரில் நடந்து சென்றபோது, இவரது கழுத்தில் இருந்த 4 பவுன் தங்கிலியை மா்ம நபா் பறித்துச் சென்றாா்.

இது குறித்து தமிழ்ப் பல்கலைக்கழகக் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து, கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனா். இதன் மூலம், தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த முத்துக்குமாரை (43) காவல் துறையினா் புதன்கிழமை கைது செய்து, அவரிடமிருந்து, 4 பவுன் தங்கச் சங்கிலி, இரு சக்கர வாகனத்தைப் பறிமுதல் செய்தனா்.

இந்த வழக்கில் சிறப்பாக பணிபுரிந்த வல்லம் காவல் துணைக் கண்காணிப்பாளா் கணேஷ்குமாா், தனிப்படை காவல் உதவி ஆய்வாளா் விஜய் உள்ளிட்டோரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆஷிஷ் ராவத் பாராட்டினாா்.