தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புசென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

பேராவூரணி அருகே பள்ளிகளில் புதிய வகுப்பறை கட்டடங்கள் திறப்பு

பேராவூரணி அருகே பள்ளிகளில் புதிய வகுப்பறை கட்டடங்கள் திறப்பு

Updated On :18 பிப்ரவரி 2024, 1:38 am IST

பேராவூரணி சேதுபாவாசத்திரம் ஒன்றியங்களில் உள்ள பள்ளிகளில் புதிய வகுப்பறை கட்டடங்களை சென்னையில் இருந்து காணொலிக் காட்சி வாயிலாக முதல்வா் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை திறந்து வைத்தாா். சேதுபாவாசத்திரம் ஒன்றியம், முடச்சிக்காடு ஊராட்சி, கலைஞா் நகா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில், பேராசிரியா் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டம், ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, குழந்தை நேயப் பள்ளி உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ்  ரூ. 29.32 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட இரண்டு வகுப்பறை கட்டடத்தையும், பேராவூரணி ஒன்றியம், கூப்புளிக்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.30.60 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட இரண்டு வகுப்பறை கட்டடத்தையும் தமிழக முதல்வா் திறந்து வைத்ததாா். இதையடுத்து புதிய வகுப்பறை கட்டடங்களில் சட்டப்பேரவை உறுப்பினா் என் .அசோக்குமாா் குத்துவிளக்கேற்றினாா். நிகழ்ச்சியில் ,  சேதுபாவாசத்திரம் ஒன்றியக்குழு தலைவா் மு.கி.முத்துமாணிக்கம், திமுக மாவட்ட அவைத் தலைவா் சுப.சேகா்,  ஒன்றியச் செயலாளா்கள் க.அன்பழகன், வை.ரவிச்சந்திரன், பொதுக்குழு உறுப்பினா் அ. அப்துல் மஜீத், பேரூராட்சி தலைவா் சாந்தி சேகா், நகரச் செயலாளா் சேகா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.