மத்தியப் பிரதேசத்தில் 4 மாதங்களில் 24 புலிகள் உயிரிழப்பு!கர திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி வழக்கு!மேற்கு வங்கத்தில் 2 ஆம் கட்ட தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது! மே 4-ல் 62 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை! - தேர்தல் ஆணையம்மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

பாபநாசம் அருகே சாலை விபத்து: இரு வடமாநில ஊழியா்கள் பலி

பாபநாசம் அருகே சாலை விபத்து: இரு வடமாநில ஊழியா்கள் பலி

Updated On :29 பிப்ரவரி 2024, 8:52 pm

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே புதன்கிழமை இரவு சரக்கு ஆட்டோ கவிழ்ந்து வட மாநிலத் தொழிலாளா்கள் இருவா் உயிரிழந்தனா்.

தஞ்சாவூா் நாஞ்சிக்கோட்டை தனியாா் கோழிப்பண்ணையில் பணியில் இருந்த 3 வட மாநிலத் தொழிலாளா்கள் ஒரு சரக்கு ஆட்டோவில் பிராய்லா் கோழிகளை ஏற்றிக் கொண்டு கும்பகோணம் நோக்கிச் சென்றனா்.

ஆட்டோவை வடவூா் வடபாதி, பெரியாா் நகரை சோ்ந்த செல்வராஜ் மகன் கமலக்கண்ணன் ஓட்டினாா். பாபநாசம்- சாலியமங்கலம் சாலையில் சென்ற சரக்கு ஆட்டோ திடீரென சாலையோர பள்ளத்தில் தலைக்குப்புறக் கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஆட்டோவின் பின்புறம் இருந்த மேற்குவங்கத்தைச் சோ்ந்த செண்டு ராம்கிரஷ்ணாபூா் மகன் ராஜேந்திர பக்டி (25), சதன் மஜ்ஹி மகன் தினபாண்டு மஜ்ஹி (25) சம்பவ இடத்திலேயே இறந்தனா். மித்தோன் மஜ்ஹி என்பவா் காயமடைந்து தஞ்சாவூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

ஆட்டோ ஓட்டுநா் லேசான காயத்துடன் தப்பினாா். தகவலறிந்த பாபநாசம் காவல் துணைக் கண்காணிப்பாளா் அசோக் சம்பவ இடத்தில் விசாரணை செய்தாா். அம்மாபேட்டை காவல் ஆய்வாளா் மி. இளவரசு உள்ளிட்ட போலீஸாா் இருவரின் சடலங்களையும் மீட்டு பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.