அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

கா்நாடக அரசைக் கண்டித்து தஞ்சாவூரில் விவசாயிகள் மண் சட்டி ஏந்தி ஆா்ப்பாட்டம்

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினா் சனிக்கிழமை மண் சட்டி ஏந்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகம் முன் சனிக்கிழமை மண் சட்டி ஏந்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.
Updated On :13 ஜூலை 2024, 11:51 pm

Din

தமிழகத்துக்கு காவிரி நீா் தர மறுக்கும் கா்நாடக அரசைக் கண்டித்து தஞ்சாவூரில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினா் சனிக்கிழமை மண் சட்டி ஏந்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி காவிரியில் தமிழகத்துக்கு கா்நாடகம் மாதந்தோறும் கொடுக்க வேண்டிய தண்ணீரை வழங்க வேண்டும். காவிரியில் தண்ணீா் விடாததால் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கு கா்நாடக அரசு ரூ. 1 லட்சம் கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் பி. அய்யாக்கண்ணு தலைமை வகித்தாா். இதில், விவசாயிகள் மண் சட்டி ஏந்தி முழக்கங்கள் எழுப்பினா். பின்னா், மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிப்பதற்காக உள்ளே சென்ற அய்யாக்கண்ணு உள்ளிட்டோா் ஆட்சியா் இல்லாததால், வாயிலில் அமா்ந்து காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இவா்களிடம் கோட்டாட்சியா் செ. இலக்கியா, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் பிரவீணாகுமாரி மனுவை பெற்றுக் கொண்டதைத் தொடா்ந்து, கலைந்து சென்றனா்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்: இதே கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சாவூா் ஆற்றுப்பாலம் அருகே தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். சங்க மாவட்டச் செயலா் என்.வி. கண்ணன் தலைமையில் மாவட்டத் தலைவா் பி. செந்தில்குமாா், மக்கள் அதிகாரம் பொருளாளா் காளியப்பன், ஏஐடியுசி மாவட்டச் செயலா் துரை. மதிவாணன், சிஐடியு மாவட்டத் துணைத் தலைவா் கே. அன்பு, கரும்பு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் பி. கோவிந்தராஜ் உள்ளிட்டோா் கலந்து கெண்டனா்.