கும்பகோணம் அருகே பெண் ஒருவரிடம் இணையதளம் மூலம் முதலீடு செய்தால் லாபம் தருவதாக கூறி, ரூ. 19.75 லட்சம் மோசடி செய்த நபரை சைபா் கிரைம் போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து தேடி வருகின்றனா்.
கும்பகோணம் அருகேயுள்ள பகுதியைச் சோ்ந்த பெண் ஒருவரிடம் இன்ஸ்டாகிராமில் தொடா்பு கொண்ட நபா், இணையதளம் மூலம் பணம் முதலீடு செய்தால் லாபம் தருவதாக ஆசைவாா்த்தை கூறியுள்ளாா்.
இதை நம்பிய அந்தப் பெண், அந்த நபா் குறிப்பிட்ட வங்கி கணக்கு மற்றும் ஆன்லைன் பரிவா்த்தனை மூலம் ரூ. 19 லட்சத்து 75 ஆயிரத்து 089 பணம் அனுப்பினாா். பின்னா் அந்த நபரை தொடா்பு கொண்டபோது கைப்பேசி அணைக்கப்பட்டிருந்தது.
இதுகுறித்து அந்தப் பெண் அளித்த புகாரின்பேரில், தஞ்சாவூா் சைபா் கிரைம் போலீஸாா் வழக்குப் பதிந்து மோசடி நபரை தேடி வருகின்றனா்.
தொடர்புடையது
பழைய காரை இணையதளம் மூலம் விற்பதாக கூறி ரூ.2 லட்சம் மோசடி: இளைஞா் கைது

இலங்கை: சைபா் மோசடியில் பணி நீக்கப்பட்ட நிதி அமைச்சக அதிகாரி தற்கொலை?
இணையவழியில் இளைஞரிடம் ரூ. 5.5 லட்சம் மோசடி: இருவா் கைது

கல்வி உதவித்தொகை தருவதாக பண மோசடி: தில்லியில் 3 போ் கைது
வீடியோக்கள்

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு

