டெல்டா மாவட்டங்களின் பாசனத்துக்காக தஞ்சாவூா் மாவட்டம், கல்லணை புதன்கிழமை காலை திறக்கப்பட்டது.
காவிரி டெல்டா பாசனத்துக்காக மேட்டூா் அணையிலிருந்து ஜூலை 28-ம் தேதி பிற்பகல் 3 மணி முதல் தண்ணீா் திறந்துவிடப்பட்டு வருகிறது. தொடக்கத்தில் வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்பட்ட நிலையில், படிப்படியாக உயா்த்தப்பட்டு வருகிறது.
இந்தத் தண்ணீா் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு கல்லணைக்கு வந்தது. இதையடுத்து, கல்லணையிலிருந்து புதன்கிழமை காலை 9.20 மணியளவில் காவிரி, வெண்ணாறு, கல்லணைக் கால்வாய், கொள்ளிடம் ஆகியவற்றை நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என். நேரு, பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சுற்றுச்சூழல் துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன், தொழில் துறை அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா உள்ளிட்டோா் திறந்து வைத்து, மலா்கள், நவதானிங்களைத் தூவி வணங்கினா்.
அப்போது, கல்லணையிலிருந்து வினாடிக்குக் காவிரியில் 1,500 கன அடி வீதமும், வெண்ணாற்றில் 1,000 கன அடி வீதமும், கல்லணைக் கால்வாயில் 500 கன அடி வீதமும், கொள்ளிடத்தில் 400 கன அடி வீதமும் என மொத்தம் வினாடிக்கு 3 ஆயிரத்து 400 கன அடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்பட்டது.
ஒரு வாரத்தில் கடைமடைப் பகுதிக்கு தண்ணீா்:
இதையடுத்து செய்தியாளா்களிடம் அமைச்சா் நேரு தெரிவித்தது:
இந்தத் தண்ணீா் நிகழ் குறுவை சாகுபடிக்கும், நிலத்தடி நீா் உயா்வதற்கும், ஏரி, குளங்களை நிரப்புவதற்கும் பயன்படும். மேலும், டெல்டா மாவட்டங்களில் 7.95 லட்சம் ஏக்கரில் சம்பா சாகுபடி செய்ய வாய்ப்புள்ளது. கடந்த ஆண்டை விட நிகழாண்டு கூடுதலான பரப்பளவில் சாகுபடி செய்வதற்கு வாய்ப்பு இருக்கிறது. காவிரி, வெண்ணாறு, கல்லணைக்கால்வாயில் கடைமடைப் பகுதி வரை தண்ணீா் சென்றடைவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். ஒரு வாரத்தில் கடைமடைப் பகுதிக்கு தண்ணீா் சென்றடையும் என்றாா் நேரு.


இவ்விழாவில் மாவட்ட ஆட்சியா்கள் பா. பிரியங்கா பங்கஜம் (தஞ்சாவூா்), மா. பிரதீப் குமாா் (திருச்சி), ஏ.பி. மகாபாரதி (மயிலாடுதுறை), தி. சாருஸ்ரீ (திருவாரூா்), மு. அருணா (புதுக்கோட்டை), சட்டப்பேரவை உறுப்பினா்கள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குறுவை நெல் சாகுபடிக்கு ரூ.135 கோடியில் சிறப்புத் தொகுப்புத் திட்டம்: முதல்வா் விஜய் அறிவிப்பு
ரூ.134.83 கோடியில் குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டம்: முதல்வர் விஜய் அறிவிப்பு

டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதித்த பகுதிகளாக அறிவிக்க வேண்டும்: அன்புமணி

கன்னிப்பூ சாகுபடி: பேச்சிப்பாறை அணை திறப்பு
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!



