டெல்டா பாசனத்துக்காகக் கல்லணை திறப்பு: 7.95 லட்சம் ஏக்கரில் சம்பா சாகுபடி செய்ய வாய்ப்பு
டெல்டா மாவட்டங்களின் பாசனத்துக்காக தஞ்சாவூா் மாவட்டம், கல்லணை புதன்கிழமை காலை திறக்கப்பட்டது.

தஞ்சாவூா் மாவட்டம், கல்லணையிலிருந்து டெல்டா பாசனத்துக்காக புதன்கிழமை காலை காவிரியில் பொத்தானை அழுத்தி தண்ணீரை திறந்துவிட்ட அமைச்சா்கள் கே.என். நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, டி.ஆா்.பி. ராஜா உள்ளிட்டோா்.










