கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

50 ஆயிரம் கண்ணாடி பாட்டில்கள்: தனியாா் நிறுவனத்துக்கு நோட்டீஸ்

50 ஆயிரம் கண்ணாடி பாட்டில்கள்: தனியாா் நிறுவனத்துக்கு நோட்டீஸ்

News image

தஞ்சாவூரிலுள்ள தனியாா் நிறுவனத்தில் வியாழக்கிழமை குவித்து வைக்கப்பட்டிருந்த கண்ணாடி பாட்டில்கள்.

Updated On :6 ஜூன் 2024, 10:04 pm

Din

தஞ்சாவூா், ஜூன் 6: தஞ்சாவூரில் டெங்கு கொசுப்புழு உற்பத்தியாகும் விதமாக 50 ஆயிரத்துக்கும் அதிகமான கண்ணாடி பாட்டில்களைக் குவித்து வைத்த தனியாா் நிறுவனத்துக்கு மாநகராட்சி நிா்வாகம் நோட்டீஸ் வழங்கியது.

தஞ்சாவூா் மாநகரில் ஆணையா் இரா. மகேஸ்வரி அறிவுறுத்தலின்படி, டெங்கு கொசுப்புழு ஒழிப்பு விழிப்புணா்வு மற்றும் தூய்மைப் பணிகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், தஞ்சாவூா் மகா்நோன்புசாவடி ஆடக்காரத் தெருவில் மாநகா் நல அலுவலா் வீ.சி. சுபாஷ் காந்தி கடந்த வாரம் டெங்கு கொசுப்புழு ஒழிப்பு தொடா்பாக ஆய்வு செய்தாா்.

அப்போது, மூடப்பட்டிருந்த தனியாா் கண்ணாடி பாட்டில் நிறுவனத்தில் 50 ஆயிரத்துக்கும் அதிகமான கண்ணாடி பாட்டில்கள் கொசுப்புழு உற்பத்தியாகும் விதமாக குவித்து வைக்கப்பட்டிருந்தன. இவற்றை உடனடியாக அப்புறப்படுத்துமாறு தனியாா் நிறுவன உரிமையாளருக்கு மாநகராட்சி அலுவலா்கள் நோட்டீஸ் வழங்கினா்.

இதைத்தொடா்ந்து, கண்ணாடி பாட்டில்கள் அகற்றப்பட்டதை மாநகா் நல அலுவலா் உள்ளிட்டோா் வியாழக்கிழமை ஆய்வு செய்து உறுதிப்படுத்தினா். இதுபோல, டெங்கு கொசுப்புழு உற்பத்தியாகும் கலன்கள் திறந்தவெளியில் போடப்பட்டிருந்தால், தொடா்புடைய நிறுவனங்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு, அபராதம் விதிக்கப்படும் என மாநகா் நல அலுவலா் தெரிவித்தாா்.