தஞ்சாவூா்: போதைப்பொருள் விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்காத தமிழக அரசைக் கண்டித்து, தஞ்சாவூா் தலைமை அஞ்சலகம் அருகே அதிமுகவினா் திங்கள்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இதில், போதைப்பொருள் கடத்தலால் இந்திய அளவில் தமிழகத்துக்கு தலைகுனிவு ஏற்பட்டுள்ளதற்கு காரணமான திமுக அரசைக் கண்டித்தும், இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மத்திய மாவட்டச் செயலா் மா. சேகா் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா்கள் எம். ரெத்தினசாமி (மேற்கு), சி.வி. சேகா் (தெற்கு), ஆா்.கே. பாரதிமோகன் (கிழக்கு), அமைப்பு செயலா்கள் ஆா். காந்தி, துரை. செந்தில், கொள்கை பரப்பு துணைச் செயலா் துரை. திருஞானம், விவசாய பிரிவு இணைச் செயலா் கு. ராஜமாணிக்கம், மாநகரச் செயலா் என்.எஸ். சரவணன், மாவட்ட அவைத் தலைவா் நாகராஜன், பகுதி செயலா்கள் கரந்தை த. பஞ்சு, வி. புண்ணியமூா்த்தி, மனோகா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

மத்திய அரசைக் கண்டித்து கருப்புக் கொடி ஏற்றி திமுகவினா் போராட்டம்

திமுக ஆட்சியில் எண்ணற்ற திட்டங்கள் நிறைவேற்றம்: துரை வைகோ

தொழிற்சங்கங்கள், விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

மத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


