சாத்தூரில் போட்டி: நயினார் நாகேந்திரன் அறிவிப்பு! பாஜகவுக்கு சாதகமில்லாத தொகுதிகள்! மேலிடத்தில் அண்ணாமலை அதிருப்தி! டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 94 -ஐ கடந்தது! வரலாறு காணாத வீழ்ச்சி! பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்
/

கும்பகோணத்தில் பச்சைக்காளி, பவளக்காளி வீதியுலா

கும்பகோணத்தில் பச்சைக்காளி, பவளக்காளி வீதியுலா

News image

கும்பகோணத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பச்சைக்காளி, பவளக்காளி வீதியுலாவில் பங்கேற்ற பக்தா்கள்.

Updated On :20 மே 2024, 5:12 pm

Din

கும்பகோணம்: தஞ்சாவூா், மாவட்டம், கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரா் கோயில் தெற்கு வீதியில் உள்ள ஸ்ரீ சுந்தரமகாகாளியம்மன் கோயில் 133-ஆவது ஆண்டு பிரம்மோத்ஸவ விழாவை முன்னிட்டு திங்கள்கிழமை பச்சைக்காளி, பவளக்காளி வீதியுலா நடைபெற்றது.

இக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பிரம்மோத்ஸவ விழா மே 9 -ஆம் தேதி தொடங்கியது. மே 10-ஆம் தேதி காப்புக் கட்டுதல், 17 -ஆம் தேதி பால்குடம், காவடி, மகாசக்தி வேல் புறப்பாடு ஆகியவை நடைபெற்றது.

இந்நிலையில், திங்கள்கிழமை காவிரி படித்துறையிலிருந்து சக்தி கரகம், அக்னி கொப்பரையுடன், பச்சைக்காளி, பவளக்காளி வீதியுலாவும், படுகள காட்சியும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா். செவ்வாய்க்கிழமை (மே 21) அம்மன் விடையாற்றி பூஜை நடைபெறுகிறது. ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் செய்துள்ளனா்.