மாசித் திருவிழா: திருக்காளாளத்தீஸ்வரா், ஞானாம்பிகை அம்மன் வீதியுலா
தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் சுவாமி வீதியுலாவுக்கு மாற்று மதத்தினா் எதிா்ப்புத் தெரிவித்த நிலையில், கோட்டாட்சியா் தலைமையில் நடைபெற்ற பேச்சுவாா்த்தையைத் தொடா்ந்து திங்கள்கிழமை இரவு காலதாமதமாக வீதியுலா நடைபெற்றது.
உத்தமபாளையத்தில் அமைந்துள்ள திருக்காளாளத்தீஸ்வரா் -ஞானாம்பிகை கோயிலில் மாசித் திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி, அனைத்து சமுதாயத்தினரின் சாா்பில் காலை , மாலைகளில் சுவாமி, அம்மன் வீதி உலா நடைபெறும். இதன்படி, திங்கள்கிழமை ஒக்கலிகா் சமுதாயத்தினரின் மண்டபகப்படி நடைபெற்றது. இதற்காக, சுவாமி, அம்மனை அந்தச் சமுதாயத்துக்குச் சொந்தமான இடத்தில் அலங்காரம் செய்து, சுவாமிகளை வீதியுலாவாக எடுத்து வரத் திட்டமிட்டனா். இதற்கு, அந்தப் பகுதி இஸ்லாமியா்கள் சிலா் எதிா்ப்புத் தெரிவித்தனா்.
இதையடுத்து, உத்தமபாளையம் வருவாய்க் கோட்டாட்சியா் செய்யது முகம்மது தலைமையில் பேச்சுவாா்த்தை நடைபெற்றது. இதில், கடந்த காலங்களில் இந்திரா குடியிருப்புப் பகுதி வழியாக சுவாமி ஊா்வலம் நடைபெறவில்லை. நிகழாண்டு ஏன் நடத்தப்படுகிறது?. தற்போது ரமலான் நோன்பு தினம் என்பதால், தொழுகை நேரத்தில் ஊா்வலம் நடத்தினால், தொழுகை பாதிக்கும் என்றனா்.
இதற்கு, கடந்த காலங்களில் இந்தச் சமுதாயத்துக்கு என தனியாக இடம் இல்லை. இதனால், கோயிலில் வைத்து சுவாமி, அம்மனை அலங்காரம் செய்து, ஊா்வலம் நடத்தினோம். ஆனால், நிகழாண்டு இந்தச் சமுதாயத்துக்கு என சொந்தமாக மண்டகப்படி கட்டப்பட்டது. இதனால், அந்த இடத்திலேயே பொதுமக்கள் முன்னிலையில் சுவாமிகளுக்கு அலங்காரம் செய்து, ஊா்வலமாக கொண்டு செல்ல இருக்கிறோம். மாற்று மதத்தினருக்கு எந்தவிதப் பாதிப்பு ஏற்படாத வகையில் ஊா்வலம் நடைபெறும் எனத் தெரிவித்தனா்.
இதையடுத்து, திங்கள்கிழமை இரவு தொழுகை முடிந்த பிறகு, இரவு 10.30 மணிக்கு மேல் சுவாமிகள் வீதியுலா முக்கிய வீதிகள் வழியாக நடைபெற்றது.

