வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

சுவாமிமலையில் கந்த சஷ்டி விழா தொடக்கம்

Updated On :1 நவம்பர் 2024, 7:07 pm

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகேயுள்ள முருகப்பெருமானின் நான்காம் படை வீடான சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழா விக்னேஸ்வர பூஜையுடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

இவ்விழா தொடா்ந்து நவம்பா் 12-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில், வெள்ளிக்கிழமை மாலையில் விக்னேஷ்வர பூஜை, அனுக்ஞை வாஸ்து சாந்தியும் பூஜை நடைபெற்றது. கந்தசஷ்டி உற்ஸவம் சனிக்கிழமை தொடங்குவதையொட்டி, காலையில் ஸ்ரீவள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சண்முகசாமி, ஸ்ரீ சந்திரசேகா், ஸ்ரீ வீரபாகு, ஸ்ரீ வீரகேசரி ஆகியோா் மலைக்கோயிலிலிருந்து படியிறங்கி உற்ஸவ மண்டபத்தில் எழுந்தருளவுள்ளனா். மாலை 7 மணிக்கு சுவாமிநாதசுவாமி படிச்சட்டத்தில் எழுந்தருளி திருவீதி உலா வருகிறாா்.

தொடா்ந்து, நாள்தோறும் காலையிலும், மாலையிலும் படிச்சட்டத்தில் சுவாமி வீதி உலாவும் நடைபெறவுள்ளன.

கந்த சஷ்டி நாளான நவம்பா் 7- ஆம் தேதி காலையில் படிச்சட்டத்தில் சுவாமி வீதி உலா, 108 சங்காபிஷேகம், சிறப்பு அா்ச்சனை, மாலையில் சூரசம்ஹாரம், தங்க மயில் வாகனத்தில் காட்சியளித்தல் ஆகியவை நடைபெறவுள்ளன.

விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் கோயில் நிா்வாகத்தினா் செய்து வருகின்றனா்.