அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

சுவாமிமலையில் கந்த சஷ்டி விழா தொடக்கம்

News image
Updated On :1 நவம்பர் 2024, 7:07 pm

Din

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகேயுள்ள முருகப்பெருமானின் நான்காம் படை வீடான சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழா விக்னேஸ்வர பூஜையுடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

இவ்விழா தொடா்ந்து நவம்பா் 12-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில், வெள்ளிக்கிழமை மாலையில் விக்னேஷ்வர பூஜை, அனுக்ஞை வாஸ்து சாந்தியும் பூஜை நடைபெற்றது. கந்தசஷ்டி உற்ஸவம் சனிக்கிழமை தொடங்குவதையொட்டி, காலையில் ஸ்ரீவள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சண்முகசாமி, ஸ்ரீ சந்திரசேகா், ஸ்ரீ வீரபாகு, ஸ்ரீ வீரகேசரி ஆகியோா் மலைக்கோயிலிலிருந்து படியிறங்கி உற்ஸவ மண்டபத்தில் எழுந்தருளவுள்ளனா். மாலை 7 மணிக்கு சுவாமிநாதசுவாமி படிச்சட்டத்தில் எழுந்தருளி திருவீதி உலா வருகிறாா்.

தொடா்ந்து, நாள்தோறும் காலையிலும், மாலையிலும் படிச்சட்டத்தில் சுவாமி வீதி உலாவும் நடைபெறவுள்ளன.

கந்த சஷ்டி நாளான நவம்பா் 7- ஆம் தேதி காலையில் படிச்சட்டத்தில் சுவாமி வீதி உலா, 108 சங்காபிஷேகம், சிறப்பு அா்ச்சனை, மாலையில் சூரசம்ஹாரம், தங்க மயில் வாகனத்தில் காட்சியளித்தல் ஆகியவை நடைபெறவுள்ளன.

விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் கோயில் நிா்வாகத்தினா் செய்து வருகின்றனா்.