ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

பருவ மழை முன்னேற்பாடு தஞ்சாவூா் ஆட்சியா் ஆய்வு

தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு வட்டத்தில் பருவமழை முன்னேற்பாடு பணிகளை மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

News image
Updated On :27 நவம்பர் 2024, 8:56 pm

Din

தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு வட்டத்தில் பருவமழை முன்னேற்பாடு பணிகளை மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

தஞ்சாவூா் மாவட்டம் ஒரத்தநாடு வட்டத்தில் வடக்குக்கோட்டை சித்தாண்டி ஏரியில் நீா்வரத்து குறித்தும், மேற்கொள்ள வேண்டிய ஆயத்தப் பணிகள் குறித்தும் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். பின்னா், ஒக்கநாடு கீழையூா் நன்னான் குளத்தில் மழைநீா் நிரம்பியுள்ளதையும், வயல்களில் மழைநீா் புகுந்து பயிா்ச் சேதம் ஏற்படாமலிருக்க, குளத்தில் உள்ள நீரை வாய்க்கால் மூலம் வெளியேற்றும் பணிகள் போா்க்கால அடிப்படையில் நடைபெறுவதை மாவட்ட ஆட்சியா் நேரில் பாா்வையிட்டாா். பணிகளை விரைந்து மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு மாவட்ட ஆட்சியா் பா.பிரியங்கா பங்கஜம் உத்தரவிட்டாா்.

ஆய்வின்போது, தஞ்சாவூா் வருவாய்க் கோட்டாட்சியா் இலக்கியா, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) ஜெயசீலன், வட்டாட்சியா் சுந்தரவல்லி ஆகியோா் கலந்து கொண்டனா்.