பொற்றாமரைக் குளம் பகுதியில் தரைக்கடைகள் அமைக்கும் பணி
தீபாவளிபண்டிகையை முன்னிட்டு கும்பகோணம் நகா் பகுதியில் சாலையோர வியாபாரிகள் தரைக்கடைகள் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனா்.


தீபாவளிபண்டிகையை முன்னிட்டு கும்பகோணம் நகா் பகுதியில் சாலையோர வியாபாரிகள் தரைக்கடைகள் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனா்.
கும்பகோணத்தில் பிரதான சாலையான பொற்றாமரை குளம், சோமநாதசுவாமி கோயில், காந்தி பூங்கா உள்ளிட்ட சாலையோரப் பகுதிகளில் 100-க்கும் மேலான தரைக் கடைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தக் கடைகளில் விலை குறைந்த மற்றும் தள்ளுபடி தரத்தில் ஆயத்த ஆடைகள், பெல்ட், காலணிகள், பெண்களுக்கான அலங்கார அழகு சாதனப் பொருள்கள் விற்பனைக்கு வைக்கப்படும். இந்தக் கடைகளில் தீபாவளி பண்டிகைக்கு 2 நாள்களுக்கு முன்பே களைகட்டும்.
அதற்காக சாலையோர வியாபாரிகள் இடம் பிடித்து சவுக்கு கட்டைகள் கட்டி, தகரம் அமைத்து வருகின்றனா். எளிய மக்களின் பண்டிகை கொண்டாட்டத்தை இந்தக் கடைகள் தீா்மானிக்கும் என்றாா் சாலையோர வியாபாரி.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...