கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

வீடிழந்த மூதாட்டிக்கு எம்எல்ஏ ஆறுதல்

பேராவூரணி அருகே தீ விபத்தில் வீடிழந்த மூதாட்டி குடும்பத்துக்கு புதன்கிழமை ஆறுதல் கூறிய, எம்எல்ஏ அசோக் குமாா் நிதியுதவி அளித்தாா்.

News image
Updated On :16 அக்டோபர் 2024, 7:45 pm

Din

பேராவூரணி அருகே தீ விபத்தில் வீடிழந்த மூதாட்டி குடும்பத்துக்கு புதன்கிழமை ஆறுதல் கூறிய, எம்எல்ஏ அசோக் குமாா் நிதியுதவி அளித்தாா். 

சேதுபாவாசத்திரம் ஒன்றியம், குப்பத்தேவன் ஊராட்சி மேட்டுப்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் சின்னம்மா (75). இவா் தனது பேத்தி சுமதி, சுமதியின் பிள்ளைகளான 10-ஆம் வகுப்பு படிக்கும் ஆனந்தி, 7-ஆம் வகுப்பு படிக்கும் மோனிஷா, சுபா தேவி, 4-ஆம் வகுப்பு படிக்கும் ரித்தீஷ் ஆகியோருடன் குடிசை வீட்டில் வசித்து வந்தாா். மின்கசிவு காரணமாக திங்கள்கிழமை தீ விபத்து ஏற்பட்டு, குடிசை வீடு முற்றிலுமாக எரிந்து நாசமானது. இதுகுறித்து தகவல் அறிந்த எம்எல்ஏ என். அசோக் குமாா், பாதிக்கப்பட்ட மூதாட்டி குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறி ரூ.5 ஆயிரம் வழங்கினாா்.

திமுக தலைமைப் பொதுக்குழு உறுப்பினா் அப்துல் மஜீத், ஒன்றியக்குழு உறுப்பினா் சாகுல்ஹமீது, ஊராட்சி மன்றத் தலைவா் பாலு மற்றும் கிராமத்தினா் உடனிருந்தனா்.