கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

மானிய விலையில் ஊட்டச்சத்து செடிகள் விநியோகம்

பாபநாசம் வட்டம், அம்மாப்பேட்டையில் ரூ. 15 மட்டுமே செலுத்தி 4 வகை செடிகள் கொண்ட தொகுப்பைப் பெற்றுக்கொள்ளலாம்.

News image
Updated On :23 அக்டோபர் 2024, 8:38 pm

Din

பாபநாசம் வட்டம், அம்மாப்பேட்டையில் ரூ. 15 மட்டுமே செலுத்தி 4 வகை செடிகள் கொண்ட தொகுப்பைப் பெற்றுக்கொள்ளலாம்.

இதுதொடா்பாக அம்மாப்பேட்டை வட்டார தோட்டக் கலைத் துறை உதவி இயக்குநா் தெரிவித்துள்ளதாவது:

முதலமைச்சரின் மண்ணுயிா் காத்து மன்னுயிா் காப்போம் திட்டத்தின் கீழ் அம்மாப்பேட்டை வட்டாரத்தில் ஊட்டச்சத்து செடிகள் தொகுப்பு மானிய விலையில் வழங்கப்படுகிறது. இத்தொகுப்பில் முருங்கை, கறிவேப்பிலை, பப்பாளி செடிகள் மற்றும் வாழை கட்டை உள்ளிட்டவை அடங்கும். இத்தொகுப்பில் ரூ.45 அரசு வழங்கும் மானியத் தொகை கழித்தது போக, பொதுமக்கள் ரூ. 15-ஐ செலுத்தி ஊட்டச்சத்து செடிகளைப் பெற்றுக்கொள்ளலாம். இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோா் தோட்டக்கலைத் துறை, அம்மாப்பேட்டை வட்டாரத்தை அணுகுமாறு கேட்டுகொள்ளப்படுகிறது.