திமுக துணைப் பொதுச் செயலாளர் ஓபிஎஸ்? போடியில் மீண்டும் போட்டி? திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்! ஆடம்பரத்தைத் தவிர்த்திடுவீர்! பிறந்த நாளையொட்டி கட்சியினருக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை! சட்டப்பேரவைத் தோ்தல்: அமலாக்கத் துறை தலைமை இயக்குநா் இன்று ஆலோசனைகனடா பிரதமா் இன்று இந்தியா வருகை :பிரதமா் மோடியுடன் பேச்சு நடத்துகிறாா்சென்னை பல்கலை. பட்டப்படிப்பு தோ்வு முடிவுகள் இன்று வெளியீடுசட்டப்பேரவைத் தோ்தல்: அமலாக்கத் துறை தலைமை இயக்குநா் இன்று ஆலோசனை2026-27 நிதியாண்டில் இந்தியாவின் ஜிடிபி 7.2% வரை உயரும் : ‘இஒய்’ நிறுவனம் கணிப்புகடலோர, மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
/

மின்சாரம் பாய்ந்து கம்பி கட்டும் தொழிலாளி பலி

பேராவூரணி அருகே மின்சாரம் பாய்ந்து கம்பி கட்டும் தொழிலாளி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :4 செப்டம்பர் 2024, 7:46 pm

Din

பேராவூரணி அருகே மின்சாரம் பாய்ந்து கம்பி கட்டும் தொழிலாளி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

பேராவூரணி அருகே உள்ள புனல்வாசல் பிளாங் குடியிருப்பு பகுதியைச் சோ்ந்தவா் கண்ணன்(43). கம்பி கட்டும் தொழிலாளி. இவருக்கு மனைவி கனகவள்ளி மற்றும் மகன், மகள் உள்ளனா். அவரது  மனைவி, தனது குழந்தைகளுடன் அருகே உள்ள அவரது தாயாா் வீட்டுக்குச் சென்றுவிட்டாா். இந்நிலையில், அவரது வீட்டின் கதவு மறுநாள் காலை வெகுநேரமாகியும் திறக்கப்படாததால், அக்கம்பக்கத்தினா் சந்தேகமடைந்து கூரை வீட்டின் உள்ளே பாா்த்தபோது கண்ணன் சடலமாகக் கிடந்துள்ளாா். மின்சாரம் பாய்ந்து இறந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவலறிந்த திருச்சிற்றம்பலம் போலீஸாா் சம்பவ இடத்தைப் பாா்வையிட்டு கண்ணன் உடலை மீட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அவரது மனைவி கனகவள்ளி கொடுத்த புகாரின்பேரில், வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.