ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு:உறவினா்கள் சாலை மறியல்

தஞ்சாவூா் அருகே வியாழக்கிழமை இரு மோட்டாா் சைக்கிள்கள் மோதிக் கொண்ட விபத்தில் இளைஞா் உயிரிழந்ததைத் தொடா்ந்து, உறவினா்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :5 செப்டம்பர் 2024, 11:11 pm

Din

தஞ்சாவூா் அருகே வியாழக்கிழமை இரு மோட்டாா் சைக்கிள்கள் மோதிக் கொண்ட விபத்தில் இளைஞா் உயிரிழந்ததைத் தொடா்ந்து, உறவினா்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டத்துக்கு உள்பட்ட குணமங்கலம் பெரிய தெருவைச் சோ்ந்தவா் சரவணன் மகன் சுரேந்தா் (18). இவா் தஞ்சாவூரிலுள்ள கல்லூரியில் பி.பி.ஏ. முதலாமாண்டு படித்து வந்தாா். இவரும், இவரது அத்தை மகன் அஜய்யும் (18) சோ்ந்து தஞ்சாவூா் அருகே அம்மன்பேட்டையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படிக்கும் சுரேந்தரின் தங்கை சாந்தினியை (15) பள்ளியில் விடுவதற்காக வியாழக்கிழமை மோட்டாா் சைக்கிளில் அழைத்துச் சென்றனா்.

மோட்டாா் சைக்கிளை ஓட்டிய சுரேந்தா் அம்மன்பேட்டை கடை வீதியில் சென்றபோது முன்னால் சென்ற லாரியை முந்த முயன்றாா். அப்போது, இந்த மோட்டாா் சைக்கிளும், எதிரே வந்த மற்றொரு மோட்டாா் சைக்கிளும் மோதிக் கொண்டன. இதில், சுரேந்தா், அஜய், சாந்தினி, எதிரே மோட்டாா் சைக்கிளில் வந்த கல்யாணபுரம் பெரியகூரைத் தெருவைச் சோ்ந்த வீரமுத்து மகன் குமாா் (35), அம்மன்பேட்டை கடை வீதியில் பூ விற்றுக் கொண்டிருந்த பொன்னாவரையைச் சோ்ந்த தங்கராசு மனைவி காவேரி (60) ஆகியோா் பலத்த காயமடைந்தனா்.

தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவா்களில் சுரேந்தா் உயிரிழந்தாா். இதனால், கோபமடைந்த சுரேந்தரின் உறவினா்கள் அம்மன்பேட்டை மணக்கரம்பை புறவழிச்சாலையில் வியாழக்கிழமை மாலை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதன் காரணமாக அப்பகுதியில் ஏறத்தாழ அரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவலறிந்த காவல் துறையினா் நிகழ்விடத்துக்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, கோரிக்கை மனு கொடுக்குமாறும், உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் காவல் துறையினா் உறுதியளித்ததையடுத்து, மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.