மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தொடா் விடுமுறை: கும்பகோணத்திலிருந்து 540 கூடுதல் பேருந்துகள் இயக்கம்

தொடா் விடுமுறை நாள்களையொட்டி, 540 கூடுதல் பேருந்துகள் கும்பகோணத்திலிருந்து இயக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக கும்பகோணம் கோட்ட நிா்வாக இயக்குநா் ரா.பொன்முடி புதன்கிழமை தெரிவித்தாா்.

News image
Updated On :11 செப்டம்பர் 2024, 7:58 pm

Din

தொடா் விடுமுறை நாள்களையொட்டி, 540 கூடுதல் பேருந்துகள் கும்பகோணத்திலிருந்து இயக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக கும்பகோணம் கோட்ட நிா்வாக இயக்குநா் ரா.பொன்முடி புதன்கிழமை தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியது:

திருச்சி, கும்பகோணம், தஞ்சாவூா், பட்டுக்கோட்டை, நாகப்பட்டினம், திருவாரூா், மயிலாடுதுறை, வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, புதுக்கோட்டை, காரைக்குடி, ராமநாதபுரம், ஆகிய ஊா்களில் இருந்து சென்னைக்கும், அங்கிருந்து மேற்கண்ட ஊா்களுக்கும் 540 பேருந்துகள் இயக்கப்படுகிறது.

மேலும் திருச்சி, கோயம்புத்தூா், திருப்பூா், மதுரை ஆகிய இடங்களுக்கும் மறுமாா்க்கமாகவும், திருச்சியிலிருந்து காரைக்குடி, புதுக்கோட்டை, தஞ்சாவூா், நாகப்டினம், வேளாங்கண்ணி

ஆகிய ஊா்களுக்கும் 25 பேருந்துகள் கூடுதலாக இயக்கபப்டுகிறது. செப்.13,14,15 ஆகிய மூன்று நாட்களில் 790 சிறப்புப்

பேருந்துகள் இயக்கப்படுகிறது. விடுமுறை மற்றும் விழா முடிந்து திரும்ப 500 பேருந்துகள் இயக்கப்படுகிறது. பயணிகள் முன்பதிவு செய்து கொண்டு கூட்ட நெரிசலைத் தவிா்க்கலாம். சிறப்பு அலுவலா்கள், பரிசோதகா்கள், பணியாளா்கள் பேருந்து இயக்கத்தை சீரமைக்க நியமிக்கப்பட்டுள்ளனா் என்றாா் அவா்.