விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

கொள்ளிடம் தடுப்பணை கையகப் பணி: விவசாயிகள் - அதிகாரிகள் பேச்சுவாா்த்தை

தஞ்சாவூா் மாவட்டம், கொள்ளிடம் தடுப்பணை திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்துதல் தொடா்பாக கும்பகோணம் சாா் ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை விவசாயிகளிடம் பேச்சுவாா்த்தை நடைபெற்றது.

Updated On :11 செப்டம்பர் 2024, 7:56 pm

தஞ்சாவூா் மாவட்டம், கொள்ளிடம் தடுப்பணை திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்துதல் தொடா்பாக கும்பகோணம் சாா் ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை விவசாயிகளிடம் பேச்சுவாா்த்தை நடைபெற்றது.

கும்பகோணம் வருவாய் கோட்டம் உதவி ஆட்சியா் ஹிருத்யா எஸ்.விஜயன் தலைமையில் கூட்ட அரங்கில் நிலம் எடுப்புப் பணி பேச்சுவாா்த்தை நடைபெற்றது. இதில் கொள்ளிடம் தடுப்பணையின் நீா் பிடிப்புப் பகுதிகளான சரபோஜிராஜபுரம் ஊராட்சியில் நிலம் கையகப்படுத்தப்பட உள்ள 63 ஏக்கருக்குச் சொந்தமான 748 விவசாயிகள், வேளாண் மற்றும் தோட்டக்கலை உள்ளிட்ட துறை அதிகாரிகள் பங்கேற்றனா்.

விவசாயிகளின் கேள்வி மற்றும் சந்தேகங்களுக்கு சாா் ஆட்சியா் உதவியாளா் வி.பூங்கொடி, திருவிடைமருதூா் வட்டாட்சியா் பாக்கியராஜ் ஆகியோா் பதில் அளித்தனா்.

நிலம் மற்றும் பயிா்களுக்கான இழப்பீடு, குடியிருக்க மாற்று இடம் உள்ளிட்டவைகள் வழங்கப்படும், நிவாரணம் போதாதவா்கள் நீதிமன்றம் மூலம் இழப்பீடு பெறலாம் என உதவி ஆட்சியா் தெரிவித்தாா். இதில், விவசாயிகள், பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டனா்.