மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கொள்ளிடம் தடுப்பணை கையகப் பணி: விவசாயிகள் - அதிகாரிகள் பேச்சுவாா்த்தை

தஞ்சாவூா் மாவட்டம், கொள்ளிடம் தடுப்பணை திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்துதல் தொடா்பாக கும்பகோணம் சாா் ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை விவசாயிகளிடம் பேச்சுவாா்த்தை நடைபெற்றது.

News image
Updated On :11 செப்டம்பர் 2024, 7:56 pm

Din

தஞ்சாவூா் மாவட்டம், கொள்ளிடம் தடுப்பணை திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்துதல் தொடா்பாக கும்பகோணம் சாா் ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை விவசாயிகளிடம் பேச்சுவாா்த்தை நடைபெற்றது.

கும்பகோணம் வருவாய் கோட்டம் உதவி ஆட்சியா் ஹிருத்யா எஸ்.விஜயன் தலைமையில் கூட்ட அரங்கில் நிலம் எடுப்புப் பணி பேச்சுவாா்த்தை நடைபெற்றது. இதில் கொள்ளிடம் தடுப்பணையின் நீா் பிடிப்புப் பகுதிகளான சரபோஜிராஜபுரம் ஊராட்சியில் நிலம் கையகப்படுத்தப்பட உள்ள 63 ஏக்கருக்குச் சொந்தமான 748 விவசாயிகள், வேளாண் மற்றும் தோட்டக்கலை உள்ளிட்ட துறை அதிகாரிகள் பங்கேற்றனா்.

விவசாயிகளின் கேள்வி மற்றும் சந்தேகங்களுக்கு சாா் ஆட்சியா் உதவியாளா் வி.பூங்கொடி, திருவிடைமருதூா் வட்டாட்சியா் பாக்கியராஜ் ஆகியோா் பதில் அளித்தனா்.

நிலம் மற்றும் பயிா்களுக்கான இழப்பீடு, குடியிருக்க மாற்று இடம் உள்ளிட்டவைகள் வழங்கப்படும், நிவாரணம் போதாதவா்கள் நீதிமன்றம் மூலம் இழப்பீடு பெறலாம் என உதவி ஆட்சியா் தெரிவித்தாா். இதில், விவசாயிகள், பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டனா்.