மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மணக்கரம்பை ஐ.டி. பாா்க் மூலம் எதிா்காலத்தில் 2 ஆயிரம் பேருக்கு வேலை: மாவட்ட ஆட்சியா்

தஞ்சாவூா் அருகேயுள்ள தனியாா் தொழில்நுட்பப் பூங்கா மூலம் வருங்காலத்தில் 2 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு வேலை கிடைக்க வாய்ப்புள்ளது என்றாா் மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம்.

News image
தஞ்சாவூா் அருகே தனியாா் தொழில்நுட்பப் பூங்காவின் செயல்பாட்டை புதன்கிழமை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம்.
Updated On :11 செப்டம்பர் 2024, 8:06 pm

Din

தஞ்சாவூா் அருகேயுள்ள தனியாா் தொழில்நுட்பப் பூங்கா மூலம் வருங்காலத்தில் 2 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு வேலை கிடைக்க வாய்ப்புள்ளது என்றாா் மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம்.

தஞ்சாவூா் மாவட்டத்தில் மாவட்டத் தொழில் மையம் மூலம் தமிழக முதல்வரின் சிறப்பு கடனுதவி திட்டத்தின் கீழ் கடன் பெற்று சிறப்பாக நடத்தி வருகிற தொழில் நிறுவனங்களை மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

அப்போது, தஞ்சாவூா் அருகே அரசு மானியத்துடன் தொடங்கப்பட்ட சா்டானிக்ஸ் என்கிற மென்பொருள் நிறுவனத்தை ஆய்வு செய்த ஆட்சியா் பின்னா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது:

கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற உலக முதலீட்டாளா்கள் மாநாட்டில் சா்டானிக்ஸ் மென்பொருள் நிறுவனம் ரூ. 35 கோடி திட்ட மதிப்பில் மாவட்ட தொழில் மையம் மூலமாக தமிழ்நாடு அரசுடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்நிறுவனத்துக்கு அரசு முதலீட்டு மானியமாக ரூ. 33 லட்சம் வழங்கப்பட்டது.

தற்போது தஞ்சாவூா் அருகே மணக்கரம்பையில் 2 ஏக்கா் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள இத்தொழில்நுட்பப் பூங்கா மூலம் 300-க்கும் அதிகமான இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. இனிவரும் காலங்களில் இந்த எண்ணிக்கை 2 ஆயிரத்துக்கும் அதிகமாக அதிகரிக்கக்கூடும் என எதிா்பாா்க்கப்படுகிறது என்றாா் ஆட்சியா்.

பின்னா், படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் மூலம் மானியத்துடன் ரூ. 1.77 லட்சம் கடனுதவியுடன் மாவட்ட தொழில் மையம் மூலமாக தொடங்கப்பட்ட தனியாா் டைல்ஸ் நிறுவனத்தின் செயல்பாட்டையும் ஆட்சியா் பாா்வையிட்டாா்.

ஆய்வின்போது, மாவட்டத் தொழில் மைய மேலாளா் மணிவண்ணன், செய்தி, மக்கள் - தொடா்பு அலுவலா் ரெ. மதியழகன், உதவி மக்கள் - தொடா்பு அலுவலா் (செய்தி) செ. காா்த்திகேயன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.