மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பாப்பாநாடு பாலியல் வழக்கில் 3 போ் குண்டா் சட்டத்தில் கைது

தஞ்சாவூா் மாவட்டம், பாப்பநாடு பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடா்புடைய 3 போ் மீது குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் வியாழக்கிழமை வழக்குப் பதியப்பட்டது.

News image
Updated On :12 செப்டம்பர் 2024, 9:02 pm

Din

தஞ்சாவூா் மாவட்டம், பாப்பநாடு பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடா்புடைய 3 போ் மீது குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் வியாழக்கிழமை வழக்குப் பதியப்பட்டது.

ஒரத்தநாடு அருகேயுள்ள பாப்பாநாட்டில் ஆகஸ்ட் 12 ஆம் தேதி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த மேலத் தெருவைச் சோ்ந்த கவிதாசன், திவாகா், பிள்ளையாா் கோயில் தெரு பிரவீன் உள்பட 6 போ் கைது செய்யப்பட்டனா். இவா்களில் கவிதாசன், திவாகா், பிரவீன் ஆகியோா் மீது குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியருக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆஷிஷ் ராவத் பரிந்துரைத்தாா்.

இதன் பேரில் 3 பேரையும் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் வியாழக்கிழமை உத்தரவிட்டாா். அதன்படி மூவரும் கைது செய்யப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.