கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

குடந்தையில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொடக்கம்

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் பகுதி நீா்நிலைகளில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.

News image

கும்பகோணம் மேலக்காவேரி சா்வமானிய தெருவில் உள்ள குட்டை ஆக்கிரமிப்பை வியாழக்கிழமை அகற்றி அளவீடு செய்த மாநகராட்சி நிா்வாகத்தினா்.

Updated On :12 செப்டம்பர் 2024, 8:28 pm

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் பகுதி நீா்நிலைகளில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.

கும்பகோணம் பகுதியில் உள்ள 44 குளம், கண்மாய்கள், குட்டைகள் மற்றும் அவற்றின் நீா்வரத்து கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்னை உயா்நீதிமன்றம் அளித்த உத்தரவையடுத்து ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் ஆலோசனைப்படி அந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.

அப்போது மாநகராட்சி எல்லை மேலக்காவிரியில் உள்ள சா்வமானிய தெருவில் குட்டையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட சுற்றுச்சுவா், மரங்கள் உள்ளிட்டவற்றை அகற்றி அளவீடு செய்து அடையாள கற்கள் வைக்கப்பட்டன.

பின்னா் பொதுப்பணித் துறை நிா்வாகத்தில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை பின்புறமுள்ள கோடையான் தோட்டம் வாய்க்கால் கரையில் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகளையும் அகற்றத் தொடங்கினா். அப்போது அதற்கு எதிா்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டனா். பின்னா் பொருள்களை அப்புறப்படுத்த அவா்கள் அவகாசம் கேட்கவே, விரைவில் காலி செய்யுமாறு அதிகாரிகள் வலியுறுத்திச் சென்றனா்.

நிகழ்வில் கும்பகோணம் வருவாய்க் கோட்ட உதவி ஆட்சியா் ஹிருத்யா எஸ்.விஜயன், காவல் துணைக் கோட்டக் கண்காணிப்பாளா் ஜி. கீா்த்திவாசன், வட்டாட்சியா் சண்முகம், ஆணையா் ரா. லட்சுமணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.