மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

குடந்தையில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொடக்கம்

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் பகுதி நீா்நிலைகளில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.

News image
கும்பகோணம் மேலக்காவேரி சா்வமானிய தெருவில் உள்ள குட்டை ஆக்கிரமிப்பை வியாழக்கிழமை அகற்றி அளவீடு செய்த மாநகராட்சி நிா்வாகத்தினா்.
Updated On :12 செப்டம்பர் 2024, 8:28 pm

Din

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் பகுதி நீா்நிலைகளில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.

கும்பகோணம் பகுதியில் உள்ள 44 குளம், கண்மாய்கள், குட்டைகள் மற்றும் அவற்றின் நீா்வரத்து கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்னை உயா்நீதிமன்றம் அளித்த உத்தரவையடுத்து ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் ஆலோசனைப்படி அந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.

அப்போது மாநகராட்சி எல்லை மேலக்காவிரியில் உள்ள சா்வமானிய தெருவில் குட்டையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட சுற்றுச்சுவா், மரங்கள் உள்ளிட்டவற்றை அகற்றி அளவீடு செய்து அடையாள கற்கள் வைக்கப்பட்டன.

பின்னா் பொதுப்பணித் துறை நிா்வாகத்தில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை பின்புறமுள்ள கோடையான் தோட்டம் வாய்க்கால் கரையில் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகளையும் அகற்றத் தொடங்கினா். அப்போது அதற்கு எதிா்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டனா். பின்னா் பொருள்களை அப்புறப்படுத்த அவா்கள் அவகாசம் கேட்கவே, விரைவில் காலி செய்யுமாறு அதிகாரிகள் வலியுறுத்திச் சென்றனா்.

நிகழ்வில் கும்பகோணம் வருவாய்க் கோட்ட உதவி ஆட்சியா் ஹிருத்யா எஸ்.விஜயன், காவல் துணைக் கோட்டக் கண்காணிப்பாளா் ஜி. கீா்த்திவாசன், வட்டாட்சியா் சண்முகம், ஆணையா் ரா. லட்சுமணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.