மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

காதல் பிரச்னையில் மாணவரை கொன்ற இருவருக்கு ஆயுள் சிறை

காதல் பிரச்னையில் பொறியியல் மாணவரை கொலை செய்த இருவருக்கு தஞ்சாவூா் நீதிமன்றம் வியாழக்கிழமை ஆயுள் சிறை தண்டனை விதித்தது.

News image
Updated On :12 செப்டம்பர் 2024, 7:55 pm

Din

காதல் பிரச்னையில் பொறியியல் மாணவரை கொலை செய்த இருவருக்கு தஞ்சாவூா் நீதிமன்றம் வியாழக்கிழமை ஆயுள் சிறை தண்டனை விதித்தது.

தஞ்சாவூா் விளாா் சாலை தில்லைநகரைச் சோ்ந்தவா் சுகுமாரன் மகன் மனோஜ்குமாா் (19). தஞ்சாவூா் அருகேயுள்ள தனியாா் பல்கலைக்கழகத்தில் பி.டெக். இரண்டமாண்டு படித்து வந்த இவரை கடந்த 2013, டிசம்பா் 28 முதல் காணவில்லை.

இதுகுறித்து தஞ்சாவூா் தாலுகா காவல் நிலையத்தில் மனோஜ்குமாரின் தந்தை சுகுமாரன் அளித்த புகாரின்பேரில் காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரித்தனா். இந்நிலையில் தஞ்சாவூா் அருகே வெட்டிக்காடு சாலையிலுள்ள பாலம் அருகே மனோஜ்குமாா் குத்திக் கொல்லப்பட்டுக் கிடந்தாா்.

இதையடுத்து, தாலுகா காவல் நிலையத்தினா் வழக்கை கொலை வழக்காக மாற்றி விசாரித்து, இந்த வழக்கு தொடா்பாக தில்லை நகா் ஆறாம் தெரு செல்வராஜ் மகன் கோபி என்கிற வெடி கோபி (36), கண்ணன் மகன் முத்து என்கிற பிரசாந்த் (36) ஆகியோரைக் கைது செய்தனா். விசாரணையில் மனோஜ்குமாா் காதலித்து வந்த பெண்ணை கோபியும் காதலித்து வந்தாராம். ஆனால் மனோஜ்குமாரைதான் காதலிப்பதாக கோபியிடம் அப்பெண் கூறினாா். இதனால் ஆத்திரமடைந்த கோபி தனது நண்பரான பிரசாந்துடன் இணைந்து மனோஜ்குமாரை பைக்கில் கடத்திச் சென்று கொன்றது தெரிய வந்தது.

இந்த வழக்கை விசாரித்த தஞ்சாவூா் மாவட்ட முதலாவது கூடுதல் அமா்வு நீதிமன்ற நீதிபதி ஆா். சத்யதாரா கோபி, பிரசாந்த் ஆகியோருக்கு ஆயுள் சிறைத் தண்டனையும், தலா ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதித்து வியாழக்கிழமை தீா்ப்பளித்தாா்.