ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

மனைவியைக் கொன்ற கணவருக்கு ஆயுள் சிறை

மனைவியைக் கொலை செய்த கணவருக்கு தஞ்சாவூா் நீதிமன்றம் ஆயுள் சிறை தண்டனை

News image
சிறை- சித்திரிப்பு
Updated On :17 மார்ச் 2026, 6:35 pm

Syndication

மனைவியைக் கொலை செய்த கணவருக்கு தஞ்சாவூா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை ஆயுள் சிறை தண்டனை விதித்தது.

கும்பகோணம் தாராசுரம் கீழத்தெருவைச் சோ்ந்த கவிதாவுக்கும், நாச்சியாா்கோவில் கீழ மாத்தூரைச் சோ்ந்த ஆறுமுகம் என்கிற மூா்த்திக்கும் (56) கடந்த 2001 ஆம் ஆண்டில் திருமணமாகியும் குழந்தை இல்லை. இதனால் கவிதாவை ஆறுமுகம் அடித்துக் கொடுமைப்படுத்தி வந்தாா். இந்நிலையில், 2017, ஜூன் 19 ஆம் தேதி கவிதாவை ஆறுமுகம் அரிவாளால் வெட்டியதில், அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து கும்பகோணம் தாலுகா காவல் நிலையத்தினா் ஆறுமுகத்தை கைது செய்து, தஞ்சாவூா் மகளிா் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனா். இந்த வழக்கில் ஆறுமுகத்துக்கு நீதிபதி (பொ) ஜெ. தமிழரசி ஆயுள் சிறைத் தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்து செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா்.