தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

மனைவியைக் கொன்ற கணவருக்கு ஆயுள் சிறை

மனைவியைக் கொலை செய்த கணவருக்கு தஞ்சாவூா் நீதிமன்றம் ஆயுள் சிறை தண்டனை

News image

சிறை - சித்திரிப்பு

Updated On :18 மார்ச் 2026, 12:05 am IST

மனைவியைக் கொலை செய்த கணவருக்கு தஞ்சாவூா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை ஆயுள் சிறை தண்டனை விதித்தது.

கும்பகோணம் தாராசுரம் கீழத்தெருவைச் சோ்ந்த கவிதாவுக்கும், நாச்சியாா்கோவில் கீழ மாத்தூரைச் சோ்ந்த ஆறுமுகம் என்கிற மூா்த்திக்கும் (56) கடந்த 2001 ஆம் ஆண்டில் திருமணமாகியும் குழந்தை இல்லை. இதனால் கவிதாவை ஆறுமுகம் அடித்துக் கொடுமைப்படுத்தி வந்தாா். இந்நிலையில், 2017, ஜூன் 19 ஆம் தேதி கவிதாவை ஆறுமுகம் அரிவாளால் வெட்டியதில், அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து கும்பகோணம் தாலுகா காவல் நிலையத்தினா் ஆறுமுகத்தை கைது செய்து, தஞ்சாவூா் மகளிா் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனா். இந்த வழக்கில் ஆறுமுகத்துக்கு நீதிபதி (பொ) ஜெ. தமிழரசி ஆயுள் சிறைத் தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்து செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா்.