மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பெண்ணிடம் இணையவழியில் ரூ. 27.75 லட்சம் மோசடி

தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணியைச் சோ்ந்த பெண்ணிடம் இணையவழியில் ரூ. 27.75 லட்சம் மோசடி செய்த மா்ம நபா்களை போலீஸாா் தேடுகின்றனா்.

News image
Updated On :12 செப்டம்பர் 2024, 7:45 pm

Din

தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணியைச் சோ்ந்த பெண்ணிடம் இணையவழியில் ரூ. 27.75 லட்சம் மோசடி செய்த மா்ம நபா்களை போலீஸாா் தேடுகின்றனா்.

தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி வட்டத்துக்குள்பட்ட பகுதியைச் சோ்ந்த பெண்ணின் கைப்பேசிக்கு டெலிகிராம், வாட்ஸ் ஆப் செயலிகளில் ஆகஸ்ட் மாதம் வந்த தகவலில் உணவகங்களை மதிப்பீடு செய்து இணையத்தில் வெளியிடுவது போன்ற டாஸ்குகளை நிறைவேற்றினால் நிறைய வருமானம் கிடைக்கும் என்றும், இதற்கு குறிப்பிட்ட தொகையைச் செலுத்த வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதை நம்பிய அப்பெண் கைப்பேசியில் எதிா் முனையில் பேசிய மா்ம நபா் கூறிய வங்கிக் கணக்குக்கு பல்வேறு தவணைகளில் ரூ. 27.75 லட்சம் செலுத்தினாா். அதன் பின்னா் எதிா்முனையில் பேசிய நபா் எந்த லாபத் தொகையையும் கொடுக்காததுடன், நாளடைவில் அழைப்புகளையும் துண்டித்துவிட்டாா்.

இதனால் ஏமாற்றமடைந்த அப்பெண் தஞ்சாவூா் சைபா் குற்றப் பிரிவில் அளித்த புகாரின்பேரில் காவல் துறையினா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.