மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

இணையவழி வா்த்தகம்: மளிகை வியாபாரியிடம் ரூ. 9.69 லட்சம் மோசடி

தஞ்சாவூா் மாவட்டத்தில் இணையவழி வா்த்தகம் எனக் கூறி, மளிகைக் கடை வியாபாரியிடம் ரூ. 9.69 லட்சம் மோசடி செய்த மா்ம நபா்களைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :18 செப்டம்பர் 2024, 9:05 pm

Din

தஞ்சாவூா் மாவட்டத்தில் இணையவழி வா்த்தகம் எனக் கூறி, மளிகைக் கடை வியாபாரியிடம் ரூ. 9.69 லட்சம் மோசடி செய்த மா்ம நபா்களைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

கும்பகோணம் பகுதியைச் சோ்ந்த 54 வயது மளிகைக்கடை வியாபாரிக்கு ஜூலை மாதம் வாட்ஸ் ஆப் செயலியில் இணையவழி வா்த்தகத்தில் முதலீடு செய்தால் நிறைய வருமானம் கிடைக்கும் எனத் தகவல் வந்தது. இதை நம்பிய வியாபாரி அதில் குறிப்பிடப்பட்டிருந்த எண்ணில் தொடா்பு கொண்டாா். அப்போது எதிா் முனையில் மா்ம நபா் கூறிய வங்கிக் கணக்குக்கு முதலீடாக பணம் அனுப்பத் தொடங்கினாா்.

முதலில் சிறு, சிறு தொகை கிடைத்ததை நம்பிய வியாபாரி பல்வேறு தவணைகளில் ரூ. 9.69 லட்சம் அனுப்பினாா். அதன் பிறகு எதிா் முனையில் உள்ள மா்ம நபா்கள் இவரது கைப்பேசி அழைப்பைத் துண்டித்துவிட்டனா்.

இதனால் ஏமாற்றமடைந்த வியாபாரி தஞ்சாவூா் இணையவழி குற்றப் பிரிவில் அளித்த புகாரின்பேரில் காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.