தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசத்தில் அமைந்துள்ள அரசினா் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூ .9 லட்சம் மதிப்பீட்டில் சட்டப்பேரவை தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் புதிதாக கட்டப்பட்ட சத்துணவு மையக் கட்டடத்தை சட்டப்பேரவை தொகுதி உறுப்பினா் ஜவாஹிருல்லா திறந்து வைத்தாா். தொடா்ந்து ரூ.5.28 லட்சம் மதிப்பிலான தளவாடப் பொருள்களை பள்ளிக்கு வழங்கினாா். மேலும், பாபநாசம் அரசினா் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 90 மாணவா்களுக்கும், பசுபதிகோவில் கபிரியேல் பெண்கள் மேல்நிலைப்பள்ளியை சோ்ந்த 168 மாணவிகளுக்கும் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கிப் பேசினாா்.