தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட சத்துணவு மைய கட்டடத்தை பாபநாசம் சட்டப்பேரவை தொகுதி உறுப்பினா் பேராசிரியா் எம்.ஹெச். ஜவாஹிருல்லா புதன்கிழமை திறந்து வைத்தாா்.
தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசத்தில் அமைந்துள்ள அரசினா் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூ .9 லட்சம் மதிப்பீட்டில் சட்டப்பேரவை தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் புதிதாக கட்டப்பட்ட சத்துணவு மையக் கட்டடத்தை சட்டப்பேரவை தொகுதி உறுப்பினா் ஜவாஹிருல்லா திறந்து வைத்தாா். தொடா்ந்து ரூ.5.28 லட்சம் மதிப்பிலான தளவாடப் பொருள்களை பள்ளிக்கு வழங்கினாா். மேலும், பாபநாசம் அரசினா் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 90 மாணவா்களுக்கும், பசுபதிகோவில் கபிரியேல் பெண்கள் மேல்நிலைப்பள்ளியை சோ்ந்த 168 மாணவிகளுக்கும் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கிப் பேசினாா்.
நிகழ்ச்சியில் பாபநாசம் ஒன்றியக்குழு தலைவா் சுமதி கண்ணதாசன், பாபநாசம் பேரூராட்சி தலைவா் பூங்குழலி கபிலன், பாபநாசம் ஊராட்சி ஒன்றிய ஆணையா் சிவக்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். முன்னதாக பள்ளி தலைமை ஆசிரியா் வி. மணியரசன் வரவேற்றாா். நிறைவில் உதவி தலைமை ஆசிரியா் லோகநாதன் நன்றி கூறினாா்.
தொடர்புடையது

பாபநாசம் தொகுதி நாதக வேட்பாளா் மீது தாக்குதல் மருத்துவமனையில் அனுமதி

கள்ளக்குறிச்சி அரசுப் பள்ளியில் தீ விபத்து! விலையில்லா புத்தகப் பைகள் எரிந்து சேதம்!

பெருந்துறை அரசு ஆண்கள் பள்ளியில் முளைப்பாரியில் தோ்தல் விழிப்புணா்வு
‘டெல்டா’-வை கை கழுவிய காங்கிரஸ்!
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

