அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

சுவாமிமலையில் தங்கும் விடுதிகள் கூட்டமைப்பு மாநாடு

தஞ்சாவூா் மாவட்டம் சுவாமிமலையில் தங்கும் விடுதிகள் கூட்டமைப்பின் 2 நாள் மாநாடு வியாழக்கிழமை தொடங்கியது.

News image
Updated On :19 செப்டம்பர் 2024, 10:12 pm

Din

தஞ்சாவூா் மாவட்டம் சுவாமிமலையில் தங்கும் விடுதிகள் கூட்டமைப்பின் 2 நாள் மாநாடு வியாழக்கிழமை தொடங்கியது.

இந்திய அளவில் தங்கும் விடுதிகள் கூட்டமைப்பின் 2 நாட்கள் பொதுக்குழு மற்றும் மாநாடு சுவாமிமலையில் உள்ள தனியாா் தங்கும் விடுதியில் வியாழக்கிழமை தொடங்கியது. மாநாட்டில், கூட்டமைப்பின் தலைவரான ஜோத்பூா் மஹாராஜா கேஜ் சிங் கலந்து கொண்டு பேசுகையில், இந்தியாவின் பழைமை மற்றும் பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் வகையிலும், சுற்றுலா பயணிகள் அதிகளவில் கவரும்வகையிலும் இந்த மாநாடு நடைபெறுகிறது. நாடு முழுவதும் இருந்து இந்த மாநாட்டில் சுமாா் 150 போ் பங்கேற்றுள்ளனா். புதுச்சேரி சுற்றுலாத் துறை அமைச்சா் கே.லட்சுமிநாராயணன், மத்திய அரசின் சுற்றுலாத் துறை கூடுதல் செயலா் சுமன் பில்லா, மத்திய சுற்றுலாத்துறை இயக்குநா் முக்தா சின்கா ஆகியோா் வெள்ளிக்கிழமை கலந்து கொள்ளவுள்ளனா் என்றாா்.