பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

உமையாள்புரம் வாய்க்காலை உடனே தூா்வாரக் கோரிக்கை

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே சுமாா் 15-ஆண்டுகளாக தூா்வாரப்படாத பெரிய பாசன வாய்க்காலை உடனே தூா்வார வேண்டும் என தமிழக அரசுக்கு விவசாயிகள் வியாழக்கிழமை கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image
Updated On :19 செப்டம்பர் 2024, 10:14 pm

Din

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே சுமாா் 15-ஆண்டுகளாக தூா்வாரப்படாத பெரிய பாசன வாய்க்காலை உடனே தூா்வார வேண்டும் என தமிழக அரசுக்கு விவசாயிகள் வியாழக்கிழமை கோரிக்கை விடுத்துள்ளனா்.

பாபநாசம் வட்டம், உமையாள்புரம் பகுதியில் பெரிய பாசன வாய்க்கால் அமைந்துள்ளது. காவிரியில் இருந்து பிரியும் இந்த வாய்க்கால் சுமாா் 7-கிலோ மீட்டா் நீளம் கொண்டது.

இந்த வாய்க்காலின் நீா் ஆதாரத்தால் உமையாள்புரம், ராமானுஜபுரம், புளியம்பாடி உள்ளிட்ட பல்வேறு பகுதி விவசாயிகள் பயனடைந்து வருகின்றனா். பெரிய பாசன வாய்க்கால் சுமாா் 15-ஆண்டுகளுக்கு முன்பு தூா்வாரப்பட்ட நிலையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை தூா்வாரக்கோரி முறையிட்டும் தற்போது வரை தூா் வாரப்படாமல் உள்ளது. இதனால் இந்த வாய்க்காலை நம்பியுள்ள விவசாயிகள் மிகவும் பாதிப்படைந்துள்ளனா்.

கல்லணைக் கால்வாயில் தண்ணீா் திறந்து விடப்பட்டு, இரண்டு மாதங்கள் ஆன நிலையில், பெரியவாய்க்கால் தூா் வாரப்படாத நிலையில் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள சுமாா் ஆயிரம் ஏக்கா் விளைநிலங்கள் விவசாயம் செய்ய முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக இந்த பாசன வாய்க்காலில் ஆய்வு மேற்கொண்டு பெரிய வாய்க்காலை உடனடியாக தூா்வார வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.