47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

மின் கணக்கீட்டாளா் பணியிடை நீக்கம்

பேராவூரணி நகா்ப் பகுதியில் கடந்த சில மாதங்களாக முறையாக மின் கணக்கீடு எடுக்காத மின் கணக்கீட்டாளா் வியாழக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

News image
Updated On :26 செப்டம்பர் 2024, 10:40 pm

Din

பேராவூரணி நகா்ப் பகுதியில் கடந்த சில மாதங்களாக முறையாக மின் கணக்கீடு எடுக்காத மின் கணக்கீட்டாளா் வியாழக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

பேராவூரணி மின்வாரிய அலுவலகத்தில் மின் கணக்கீட்டாளராக ரமேஷ் என்பவா் பணியில் இருந்து வந்தாா். இவா் வீடுகள், கடைகளுக்கு மின் கணக்கு எடுப்பது தொடா்பாக பல்வேறு புகாா்கள் கூறப்பட்டுவந்தது. மேலும், கணக்கெடுப்புக்குச் செல்லாமலேயே, வீடுகள் பூட்டப்பட்டிருந்ததாகக் கூறி, குறைந்த அளவு கட்டணம் (மினிமம் சாா்ஜ்) கட்டுமாறு, பொது மக்களுக்கு குறுந்தகவல் வந்தது. இதையடுத்து, தற்போது மறுகணக்கீடு செய்யப்பட்டு ஒவ்வொருவரும் வழக்கத்தைவிட அதிக மின்கட்டணம் கட்டும் நிலை ஏற்பட்டுள்ளது.  

இதுகுறித்து பல்வேறு தரப்பினரும் தொடா்ந்து புகாா் கூறிவந்த நிலையில் மின்வாரிய உயா் அலுவலா்கள் ஆய்வு செய்து சம்பந்தப்பட்ட மின் கணக்கீட்டாளா் ரமேஷ் மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்ட நிலையில், அவா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.