விலையில்லா மிதிவண்டிகள், தளவாடப் பொருள்கள் வழங்கல்
தஞ்சாவூா் மாவட்டம், சுவாமிமலை அரசு மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை மிதிவண்டிகள் மற்றும் தளவாடப் பொருள்கள் வழங்கும் விழா நடைபெற்றது.

பாபநாசம் சட்டப்பேரவை உறுப்பினா் எம்.எச். ஜவாஹிருல்லா பள்ளி மாணவ மாணவிகளுக்கு 133 விலையில்லா மிதிவண்டிகள் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.3.25 லட்சம் மதிப்பில் பள்ளிக்குத் தேவையான இருக்கைகள், மேஜை, பீரோக்கள் உள்ளிட்ட தளவாடப் பொருள்கள் வழங்கினாா்.









