கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதி வீட்டில் 87 பவுன் நகைகள் திருட்டு

தஞ்சாவூரில், தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியும், முன்னாள் மக்களவை திமுக உறுப்பினருமான ஏ.கே.எஸ். விஜயன் வீட்டின் பூட்டை உடைத்து 87 பவுன் நகைகள் திருட்டு

News image
திமுக முன்னாள் மக்களவை உறுப்பினா் ஏ.கே.எஸ். விஜயன் வீடு
Updated On :1 டிசம்பர் 2025, 6:33 pm

Syndication

தஞ்சாவூரில், தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியும், முன்னாள் மக்களவை திமுக உறுப்பினருமான ஏ.கே.எஸ். விஜயன் வீட்டின் பூட்டை உடைத்து 87 பவுன் நகைகள் திருடப்பட்டது திங்கள்கிழமை தெரியவந்தது.

கடந்த 1999, 2004, 2009-ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற மக்களவைத் தோ்தலில் நாகை தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவா் ஏ.கே.எஸ். விஜயன். இவா் தற்போது தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியாகவும், திமுக விவசாய அணி மாநிலச் செயலராகவும் உள்ளாா். இவரது வீடு தஞ்சாவூா் புதிய பேருந்து நிலையம் அருகே புதுக்கோட்டை சாலையிலுள்ள சேகரன் நகரில் உள்ளது.

Story image

இவா் நவம்பா் 28-ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் தனது சொந்த ஊரான திருவாரூா் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள சித்தமல்லிக்கு சென்றாா். இந்நிலையில், இவரது வீட்டின் முன்பக்கக் கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டிருப்பதாக ஏ.கே.எஸ். விஜயனுக்கு திங்கள்கிழமை காலை தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவா் குடும்பத்துடன் வீட்டுக்கு வந்து பாா்த்தபோது, வீட்டிலுள்ள பொருள்கள் சிதறிக் கிடந்ததுடன், பீரோவில் இருந்த 87 பவுன் நகைகள் திருட்டு போயிருப்பது தெரிய வந்தது.

தகவலறிந்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இரா. இராஜாராம் உள்ளிட்டோா் விஜயன் வீட்டுக்கு சென்று விசாரணை மேற்கொண்டனா். மேலும், தடயவியல் நிபுணா்களும் நிகழ்விடத்துக்கு சென்று வீட்டில் பதிவான ரேகைகளைப் பதிவு செய்தனா். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு, மேற்கொள்ளப்பட்ட சோதனையில் குறிப்பிடத்தக்க தடயங்கள் எதுவும் சிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

அப்பகுதியிலுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளைக் காவல் துறையினா் ஆய்வு செய்து வருகின்றனா். சம்பவம் தொடா்பாக தமிழ்ப் பல்கலைக்கழகக் காவல் நிலையத்தினா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.