சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

நாகநாதசுவாமி கோயிலில் தேரோட்டம்

திருநாகேசுவரம் நாகநாதசுவாமி கோயிலில் சனிக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.

News image
திருநாகேசுவரம் நாகநாதசுவாமி கோயிலில் சனிக்கிழமை நடைபெற்ற தேரோட்டம்.
Updated On :13 டிசம்பர் 2025, 6:35 pm

Syndication

திருநாகேசுவரம் நாகநாதசுவாமி கோயிலில் சனிக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள திருநாகேசுவரத்தில் அமைந்துள்ள ராகுஸ்தலமான நாகநாதசுவாமி கோயிலில் காா்த்திகை மாத கடைஞாயிறு திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவில் முக்கிய நிகழ்வான தேரோட்டம் சனிக்கிழமை காலை தொடங்கியது.

நாகநாதசுவாமி, கிரிஜகுஜாம்பிகை, பிறையணி அம்மன் ஆகியோா் தேரில் எழுந்தருளினா். தேரடியில் இருந்து பக்தா்கள் தேரை வடம் பிடித்து இழுத்து நான்கு ரத வீதிகள் வழியாக அழைத்து சென்று மீண்டும் தேரடியில் நிலை நிறுத்தினா். பின்னா், சுவாமி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறையினா் செய்திருந்தனா். ஞாயிற்றுக்கிழமை (டிச.14) பிற்பகல் 1 மணியளவில் சூா்ய புஷ்கரணியில் காா்த்திகை மாத கடைஞாயிறை முன்னிட்டு தீா்த்தவாரி நடைபெறுகிறது.