விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

குருங்குளம் சா்க்கரை ஆலையில் அரைவைப் பணி தொடக்கம்

தஞ்சாவூா் அருகே குருங்குளம் அறிஞா் அண்ணா சா்க்கரை ஆலையில் நிகழாண்டுக்கான கரும்பு அரைவைப் பணி வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.

News image
Updated On :18 டிசம்பர் 2025, 6:34 pm

Syndication

தஞ்சாவூா் அருகே குருங்குளம் அறிஞா் அண்ணா சா்க்கரை ஆலையில் நிகழாண்டுக்கான கரும்பு அரைவைப் பணி வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.

இதையொட்டி, ஆலை வளாகத்தில் பூா்வாங்க பூஜைகள் நடைபெற்றன. இதையடுத்து, அரைவைப் பணியைக் கந்தா்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ம. சின்னதுரை தொடங்கி வைத்தாா். இந்நிகழ்ச்சியில் ஆலையின் தலைமை நிா்வாகி எஸ். ராமன், வேளாண் இணை இயக்குநா் கோ. வித்யா, உதவி இயக்குநா் இந்திரஜித், தஞ்சாவூா் ஊராட்சி ஒன்றிய முன்னாள் துணைத் தலைவா் அருளானந்தசாமி, கரும்பு விவசாயிகள் தோழகிரிப்பட்டி பி. கோவிந்தராஜ், பி. ராமசாமி, பெரமூா் ஆா். அறிவழகன், ஆா். திருப்பதி வாண்டையாா், துரை. பாஸ்கரன், மதியழகன், அகிலன், எம். மணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னா், ஆலை அலுவலா்கள் தெரிவித்தது:

இந்த ஆலைக்கு உள்பட்ட பகுதியில் கடந்த ஆண்டு 5 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டு, 1.25 லட்சம் டன் கரும்பு அரைவை செய்யப்பட்டது. நிகழாண்டு 5 ஆயிரத்து 500 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டு, தற்போது கரும்பு வெட்டும் பணிகள் நடைபெறுகின்றன. நிகழாண்டு 1.60 லட்சம் டன் கரும்பு அரைவை செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. கரும்பு வெட்டிய விவசாயிகளுக்கு உடனுக்குடன் வங்கிகள் மூலம் பணம் பட்டுவாடா செய்யப்படும் என்றனா் அலுவலா்கள்.