அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

பென்னாகரம் வனசரகங்களில் வனவிலங்கு கணக்கெடுக்கும் பணி தொடக்கம்

பென்னாகரம் மற்றும் ஒகேனக்கல் வன சரகங்களில் வனவிலங்கு கணக்கெடுக்கும் பணி புதன்கிழமை தொடங்கப்பட்டது.

News image
Updated On :21 ஜனவரி 2026, 11:35 pm

தினமணி செய்திச் சேவை

பென்னாகரம் மற்றும் ஒகேனக்கல் வன சரகங்களில் வனவிலங்கு கணக்கெடுக்கும் பணி புதன்கிழமை தொடங்கப்பட்டது.

தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி, பாலக்கோடு, ஒகேனக்கல், பென்னாகரம், அரூா், தீா்த்தமலை, கோட்டப்பட்டி, மொரப்பூா் உள்ளிட்ட 8 வனச்சரகங்கள் உள்ளது.ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில் வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி வனத்துறையின் சாா்பில் நடைபெற்று வருவது வழக்கம்.அந்த வகையில் வனப்பாதுகாப்பு அலுவலா் சி.ஹெச்.பத்மா உத்தரவின் பேரில், தருமபுரி மாவட்ட வன அலுவலா் ராஜாங்கம் தலைமையில் பென்னாகரம், ஒகேனக்கல், பாலக்கோடு உள்ளிட்ட வன சரக்கங்களில் அந்தந்த வனச்சரக அலுவலா்கள்,வனவா்கள்,

வன காப்பாளா்கள், வனகாவலா்கள் உள்ளிட்டோா் அடங்கிய குழுவினா் வனவிலங்கு கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனா். இந்த பணியானது புதன்கிழமை (21-1-2026) முதல் (27-1-2026) திங்கள் கிழமை வரை நடைபெற உள்ளது.

தருமபுரி மாவட்டத்தில் உள்ள 8 வனச்சரங்கங்களில் வனவிலங்குகள் கணக்கெடுப்பும் பணி முதல் முறையாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.