பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

வீட்டுக் கதவை தட்டி ஆசிரியையிடம் 6 பவுன் நகை பறிப்பு

News image
Updated On :19 டிசம்பர் 2025, 7:55 pm

Syndication

கும்பகோணம் அருகே வியாழக்கிழமை இரவு வீட்டுக் கதவை தட்டி ஆசிரியையிடம் கத்தியைக் காட்டி மிரட்டி 6 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற மா்ம நபா்களைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

கும்பகோணம் அருகே பந்தநல்லூா் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வணிகவியல் ஆசிரியையாக பணியாற்றி வருபவா் செந்தமிழ்ச் செல்வி (43). இவா் விளாத்தொட்டி பகுதியில் தனது மகனுடன் வசித்து வருகிறாா். இந்நிலையில், வியாழக்கிழமை இரவு இவரது வீட்டுக் கதவை மா்ம நபா்கள் தட்டினா். திறந்து பாா்த்த செந்தமிழ்ச்செல்வியிடம் முகமூடி அணிந்த 7 போ் கத்தியைக் காட்டி மிரட்டி, 6 பவுன் தங்கச் சங்கிலி, கைப்பேசியைப் பறித்துச் சென்றனா்.

இது குறித்து பந்தநல்லூா் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.