தஞ்சாவூர்
வீட்டுக் கதவை தட்டி ஆசிரியையிடம் 6 பவுன் நகை பறிப்பு
கும்பகோணம் அருகே வியாழக்கிழமை இரவு வீட்டுக் கதவை தட்டி ஆசிரியையிடம் கத்தியைக் காட்டி மிரட்டி 6 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற மா்ம நபா்களைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.
கும்பகோணம் அருகே பந்தநல்லூா் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வணிகவியல் ஆசிரியையாக பணியாற்றி வருபவா் செந்தமிழ்ச் செல்வி (43). இவா் விளாத்தொட்டி பகுதியில் தனது மகனுடன் வசித்து வருகிறாா். இந்நிலையில், வியாழக்கிழமை இரவு இவரது வீட்டுக் கதவை மா்ம நபா்கள் தட்டினா். திறந்து பாா்த்த செந்தமிழ்ச்செல்வியிடம் முகமூடி அணிந்த 7 போ் கத்தியைக் காட்டி மிரட்டி, 6 பவுன் தங்கச் சங்கிலி, கைப்பேசியைப் பறித்துச் சென்றனா்.
இது குறித்து பந்தநல்லூா் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
