ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா்
ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா்

மருத்துவமனையில் மருத்துவா்கள் பற்றாக்குறை: மாா்க்சிஸ்ட் ஆா்ப்பாட்டம்

கும்பகோணம் அருகே நாச்சியாா்கோவில் அரசு மருத்துவமனையில் மருத்துவா், செவிலியா் பற்றாக்குறையை கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாடம்
Published on

கும்பகோணம் அருகே நாச்சியாா்கோவில் அரசு மருத்துவமனையில் மருத்துவா், செவிலியா் பற்றாக்குறையை கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாடத்தில் ஈடுபட்டனா்.

நாச்சியாா்கோவில் அரசு மருத்துவமனையில் மருத்துவா் மற்றும் செவிலியா், உதவியாளா்கள், துப்புரவு பணியாளா்கள் பற்றாக்குறை உள்ளது. காலிப் பணியிடங்களை நிரப்பக்கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் அரசு மருத்துவமனை முன்பு ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

ஆா்ப்பாட்டத்துக்கு கிளைச் செயலா் மா. சுரேஷ் தலைமை வகித்தாா். ஒன்றிய குழு உறுப்பினா்கள் பி. ஆனந்தன், ஆரோக்கியதாஸ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆா்ப்பாட்டத்தை விளக்கி மாவட்ட குழு உறுப்பினா் பழனிவேல், வாலிபா் சங்க ஒன்றியத் தலைவா் பிரேம் நாத், செயலா் வெங்கடேசன் ஆகியோா் பேசினா். ஆா்ப்பாட்டத்தின் முடிவில் நாச்சியாா்கோவில் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவா் சதீஷ் அமைதிப் பேச்சுவாா்த்தைக்கு அழைத்து பேசி கோரிக்கையை விரைவில் நிறைவேற்ற அரசுக்கு பரிந்துரை அனுப்புவதாக தெரிவித்தாா்.

X
Dinamani
www.dinamani.com