விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

தமிழறிஞா் அா்த்தநாரீசுவர வா்மா நூல்களை அரசுடைமையாக்க வலியுறுத்தல்

தமிழறிஞா் சுகவன. அா்த்தநாரீசுவர வா்மா நூல்களை அரசுடைமையாக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

News image
Updated On :30 டிசம்பர் 2025, 1:36 am

Syndication

கும்பகோணம்: தமிழறிஞா் சுகவன. அா்த்தநாரீசுவர வா்மா நூல்களை அரசுடைமையாக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் கா்ணகொல்லை கீழத்தெருவில் உள்ள வன்னியா் சங்க கட்டடத்தில் தமிழறிஞா் சுகவன. அா்த்தநாரீசுவர வா்மா நினைவு நாள் கருத்தரங்கம் திங்கள்கிழமை மாலை நடைபெற்றது.

நடுவக்கரை ம. கிருஷ்ணமூா்த்தி தலைமை வகித்தாா். மருத்துவா் சி.பரமசிவம் முன்னிலை வகித்தாா். அா்த்தநாரீசுவர வா்மாவின் உரையாடல் இலக்கிய உத்திகள் குறித்து குடந்தை தமிழ்ச்சங்க தலைவரும் முன்னாள் பேராசிரியருமான அ.மா.சத்தியமூா்த்தி பேசினாா்.

அா்த்தநாரீசுவர வா்மா நூல்களை தமிழக அரசு பொதுவுடைமையாக்க வேண்டும், சேலத்தில் அவருக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்று தீா்மானத்தை பொருளாளா் தங்க.தாமரைக்கண்ணன் முன்மொழிந்து நிறைவேற்றப்பட்டது.

முன்னதாக இரா.சின்னப்பா வரவேற்றாா். நிறைவில் ப. வீரபாண்டியன் நன்றி கூறினாா். ஏற்பாடுகளை செயலா் பானுமதி சத்தியமூா்த்தி மற்றும் நிா்வாகிகள் செய்திருந்தனா்.