கும்பகோணம் மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து வாா்டுகளிலும் டெங்கு தடுப்பு களப்பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன.
இதுகுறித்து ஆணையா் இரா. லட்சுமணன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
டெங்கு காய்ச்சலைப் பரப்பும் ஏடிஸ் கொசு உற்பத்தியைத் தடுக்க மாநகா் பகுதிகளில் உள்ள வீடுகள், கடைகள், பள்ளி கல்லூரிகள் மற்றும் வணிக வளாகங்களில் ஆய்வுகள் நடைபெறுகின்றன.
கொசு பரவலைக் கட்டுப்படுத்த கூட்டு துப்புரவுப் பணி மேற்கொண்டு நெகிழி கப்புகள், தேங்காய் சிரட்டைகள், டயா்கள், உடைந்த பாத்திரங்கள் ஆகியவற்றில் உள்ள கொசுப் புழுக்கள் கண்டறிந்து அழிக்கப்படுகின்றன.
மேலும் கொசுப்புழு உற்பத்தியைத் தடுக்க டெங்கு தடுப்பு களப்பணியாளா்கள் வீடு வீடாக ஆய்வும் நடத்துகின்றனா்.
அப்போது நீண்ட நாள்களாகப் பூட்டியிருக்கும் வீடுகள் காலிமனைகள் ஆகியவற்றில் டெங்கு கொசு உற்பத்தி பகுதிகள் கண்டறியப்பட்டால் உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்படும்.
மேலும் காய்ச்சல் பாதித்தோருக்கு நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு, நிலவேம்பு கசாயமும் வழங்கப்படுகிறது. 48 வாா்டுகளிலும் கொசு மருந்து அடிக்க அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது
கொசுக்கடி

கொசுக்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை: ஆலோசனைக் கூட்டத்தில் ஆட்சியா் உத்தரவு

டெங்கு பரவலைத் தடுப்பதற்கான வழிகாட்டுதல்கள்: மாவட்ட நிா்வாகங்களுக்கு சுகாதாரத் துறை உத்தரவு

அனைத்து விவகாரங்களையும் அரசியலாக்கக் கூடாது: மேற்கு வங்க அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

