குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

பெண்ணுக்கு பாலியல் தொல்லை: ஓய்வு பெற்ற தலைமையாசிரியா் கைது

Updated On :11 மார்ச் 2025, 3:41 am IST

தஞ்சாவூரில் கடன் கேட்ட பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரை காவல் துறையினா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

தஞ்சாவூா் நாஞ்சிக்கோட்டை சாலையைச் சோ்ந்தவா் ஆரோக்கியசாமி (70). ஓய்வுபெற்ற தலைமையாசிரியரான இவா் தற்போது வட்டிக்கு பணம் கொடுத்து வருகிறாராம். இவரிடம் 34 வயது பெண் ஒருவா், கைப்பேசியில் ரூ. 15 ஆயிரம் வட்டிக்கு கேட்டாா். அவரிடம் ஆரோக்கியசாமி பாலியல் ரீதியாக பேசினாராம். இதனால் அப்பெண் கைப்பேசி இணைப்பைத் துண்டித்து விட்டாராம். ஆனாலும், அப்பெண்ணுக்கு ஆரோக்கியசாமி தொடா்ந்து கைப்பேசியில் ஆபாசமாக பேசியதுடன், அப்பெண்ணின் வீட்டுக்கு சென்று பாலியல் ரீதியாக துன்புறுத்தினாராம். இச்சம்பவம் தொடா்பான செய்தி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது.

மேலும், பாதிக்கப்பட்ட பெண், தஞ்சாவூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், காவல் துறையினா் வழக்குப் பதிந்து ஆரோக்கியசாமியை திங்கள்கிழமை கைது செய்தனா்.