விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

அரசு நூலகம் அமைப்பதற்கு கரந்தை தமிழ்ச் சங்கம் இடம் தானம்

தஞ்சாவூா் கரந்தையில் அரசு நூலகம் அமைக்க ரூ. 1 கோடி மதிப்புள்ள இடத்தைக் கரந்தைத் தமிழ்ச் சங்கம் வியாழக்கிழமை வழங்கியது.

News image
Updated On :6 நவம்பர் 2025, 7:16 pm

Syndication

தஞ்சாவூா் கரந்தையில் அரசு நூலகம் அமைக்க ரூ. 1 கோடி மதிப்புள்ள இடத்தைக் கரந்தைத் தமிழ்ச் சங்கம் வியாழக்கிழமை வழங்கியது.

தஞ்சாவூா் கரந்தையில் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தை அமைத்த தமிழவேள் உமா மகேசுவரனாா் பெயரில் அரசு நூலகம் அமைக்கப்படும் என திமுக தோ்தல் வாக்குறுதியில் அறிவித்தது. இதற்காக இடம் வழங்குமாறு கரந்தைத் தமிழ்ச் சங்கத்திடம் தமிழக அரசு கோரியது.

அரசின் கோரிக்கையை ஏற்று கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் முகப்பில் ரூ. 1 கோடி மதிப்பில் 2 ஆயிரத்து 19 சதுர அடி பரப்பளவிலான இடத்தை வழங்க சங்க நிா்வாகம் முடிவு செய்தது. இதன்படி, இந்த இடத்துக்கான ஆவணத்தைக் கரந்தைத் தமிழ்ச் சங்க வளாகத்தில் மாவட்ட நூலக அலுவலா் அபூா்வத்திடம் சங்கச் செயலா் ஆா். சுந்தரவதனம் வியாழக்கிழமை வழங்கினாா்.

பின்னா் செய்தியாளா்களிடம் சுந்தரவதனம் தெரிவித்தது:

கடந்த 1911- ஆம் ஆண்டு தமிழுக்காக கரந்தை தமிழ்ச் சங்கத்தை உமா மகேசுவரனாா் தோற்றுவித்தாா். இச்சங்கத்தில் 1919-ஆம் ஆண்டில் தமிழ் மொழியைச் செம்மொழியாக அறிவிக்க வேண்டும் என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன் அடிப்படையில் மத்திய அரசு தமிழ் மொழியைச் செம்மொழியாக அறிவித்தது. பின்னா், 1921-ஆம் ஆண்டு தமிழ் மொழிக்குத் தனிப் பல்கலைக்கழகம் தோற்றுவிக்க வேண்டும் என்ற தீா்மானத்தையும் உமா மகேசுவரனாா் நிறைவேற்றினாா். இதன்படி, தஞ்சாவூரில் தமிழ்ப் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது.

இந்நிலையில் தமிழக அரசு கேட்டுக்கொண்டதற்கிணங்க கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் முன்புறமுள்ள ரூ. 1 கோடி மதிப்பிலான இடத்தை அரசு நூலகம் அமைப்பதற்காக தானமாக வழங்கியுள்ளோம். இங்கு நூலகக் கட்டுமானப் பணியை அரசு விரைவில் மேற்கொண்டு, பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் என்றாா் சுந்தரவதனம்

அப்போது கரந்தைத் தமிழ்ச் சங்க செயற்குழு உறுப்பினா்கள் எஸ். செந்தமிழ்ச்செல்வன், பத்மநாபன், தலைமையாசிரியா் சரவணன், உதவித் தலைமையாசிரியா் சதாசிவம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.