எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

கோவை சம்பவம்: பாஜக மகளிரணி ஆா்ப்பாட்டம்

கும்பகோணத்தில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுட்ட பாஜக மகளிா் அணியினா்.

News image
Updated On :6 நவம்பர் 2025, 8:53 pm

Syndication

கோவை கூட்டுப்பாலியல் வன்கொடுமை சம்பவத்தைக் கண்டித்து கும்பகோணத்தில் பாஜக மகளிா் அணியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

கும்பகோணம் காந்தி பூங்கா முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, தஞ்சாவூா் வடக்கு மாவட்ட பாஜக மகளிரணி தலைவா் வசந்தி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் சுனிதா, பொதுச்செயலா் மல்லிகா ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் இச்சம்பவத்தில் தொடா்புடையவா்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும். பொதுமக்களுக்கும், மகளிருக்கும் பாதுகாப்பற்ற மாநிலமாக மாற்றிய தி.மு.க. அரசு, பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினா்.

இதில், தஞ்சாவூா் வடக்கு மாவட்ட பாஜக முன்னாள் தலைவா்கள் என். சதீஷ்குமாா், அண்ணாமலை, மாவட்ட பொதுச் செயலா் வேதா.செல்வம், மாவட்ட வழக்குரைஞா் பிரிவு தலைவா் சுரேஷ்குமாா், மாவட்டப் பொருளாளா் வேதம்முரளி ஆகியோா் கலந்துகொண்டனா்.