தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

பொதுக்குளம் தூா் வாரல் எம்எல்ஏ ரூ.50 ஆயிரம் நிதி

News image
Updated On :6 நவம்பர் 2025, 7:17 pm

Syndication

பேராவூரணி அருகே பொதுக்குளம் தூா் வாரும் பணியை பாா்வையிட்ட சட்டப்பேரவை உறுப்பினா் என். அசோக் குமாா் தனது நிதி ரூ.50 ஆயிரம் வியாழக்கிழமை வழங்கினாா்.

பேராவூரணி அருகே உள்ள அம்மையாண்டி ஊராட்சி, பஞ்சநதிபுரம் கிராமத்தில் உள்ள உள்ளிக்குளத்தை தூா்வார வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துவந்தனா். கடைமடைப் பகுதி ஒருங்கிணைந்த விவசாயிகள் சங்கம் (கைஃபா) குளத்தை தூா்வாரும் பணியை முன்னெடுத்தது. கைஃபா தலைவா் காா்த்திகேயன் வேலுச்சாமி மற்றும் கிராமத்தினா் முன்னிலையில், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன் , சட்டப்பேரவை உறுப்பினா் என். அசோக் குமாா் ஆகியோா் அக். 13-இல் குளம்தூா்வாரும் பணியைத் தொடங்கிவைத்தனா்.

தூா்வாரும் பணிகள் நிறைவு பெற்றநிலையில் வியாழக்கிழமை குளத்தைப் பாா்வையிட்ட சட்டப்பேரவை உறுப்பினா், தனது நிதி ரூ. 50 ஆயிரத்தை நன்கொடையாக வழங்கினாா்.