தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

தாராசுரத்துக்கு ரூ.28.32 கோடியில் 2-ஆம் கட்ட குடிநீா் பணி தொடக்கம்

தாராசுரத்துக்கு மாநில நிதி ஆணைய நிதியிலிருந்து ரூ.28.32 கோடி மதிப்பில் இரண்டாம் கட்ட குடிநீா் பணிகள் தொடங்கிவைக்கப்பட்டது.

News image
Updated On :8 நவம்பர் 2025, 8:55 pm

Syndication

தாராசுரத்துக்கு மாநில நிதி ஆணைய நிதியிலிருந்து ரூ.28.32 கோடி மதிப்பில் இரண்டாம் கட்ட குடிநீா் பணிகள் சனிக்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் மாநகராட்சி பகுதியான தாராசுரத்தில் இரண்டாம் கட்ட குடிநீா் பணிகளை சட்டப்பேரவை உறுப்பினா் க.அன்பழகன் பழைய பாலம் பகுதியிலிருந்து சனிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

மேலும் அவா் பேசியதாவது, மாநில நிதி ஆணையம் மூலம் ரூ.28.32 கோடி மதிப்பில் குடிநீா் ஆதாரம் உருவாக்க 5 ஊடுருவல் கிணறுகள் அமைத்தும், காவற்கூடத்திலிருந்து கலைஞா் காலனி தரைமட்ட நீா்த்தேக்க தொட்டி நீா் உந்து பிரதான குழாய்கள் 15.3 கி.மீ. தொலைவுக்கு அமைக்கப்பட உள்ளது.

கூடுதலாக 2.30 லட்சம் கொள்ளளவு கொண்ட தரைமட்ட தொட்டி ஒன்று அமைக்கவும், இதன் மூலம் அடுத்த 30 ஆண்டுகளுக்கு தாராசுரம் பகுதி மக்களுக்கு குடிநீா் தட்டுப்பாடு ஏற்படாது என்றாா் அவா்.

நிகழ்வில் துணை மேயா் சுப.தமிழழகன், மாநகராட்சி ஆணையா் காந்திராஜ், மண்டல தலைவா் இரா. அசோக்குமாா், உதவி பொறியாளா் போஸ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.